மருத்துவம் : குடும்ப நலம் (Family Welfare)

2022 நவம்பர் 16-30 2022 மருத்துவம்

– மரு.இரா. கவுதமன்

‘‘கு டும்ப நலம்’’ என்பது குடும்பத்தின் முக்கிய பங்கு வகிக்கும் ‘‘பெண்களின் நலமே’’ என்பதில் இரு வேறு வேறு கருத்துகள் இல்லை.
குடும்பத்தில் உள்ள அனைவரும் நல்ல உடல்
நலத்துடன் இருப்பது மட்டுமன்றி, நல்ல மனவளத்
துடன் இருக்கவேண்டும். எப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பமே படித்ததுபோல் ஆகுமோ, அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் நல்ல உடல் நலத்தோடு இருப்பா
ரெனில் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் நல்ல உடல் நலத்தோடு பாதுகாக்கும் பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்வார். பெண்கள் நல்ல உடல் நலத்தோடு இருக்க ‘மகப்பேறு கட்டுப்பாடு, என்பது ஒரு முக்கியமான காரணமாகும்.

தமிழ்நாட்டில் மகப்பேறு கட்டுப்பாடு என்ற திட்டம் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒரு திட்டமாகும். தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட ஒரு பதிப்பில் ‘நம் தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட தந்தை பெரியார் அவர்
களின் இடைவிடாத பரப்புரையும், திராவிட இயக்க அரசுகளுமே அடிப்படைக் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது. – தந்தை பெரியார் என்ற இந்த நூற்றாண்டின் தலை சிறந்த சிந்தனைவாதிதான் பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்த ஒரு தலைவர் என்றால் மிகையாகாது.
தன் வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடந்த, அழுத்தப்பட்டுக் கிடந்த மக்களின் எழுச்சிக்கு உழைத்து அவர்களை “மானமும், அறிவும்” உடையவர்களாக மாற்றுவதே என் முதல் பணி” என்று போராடினாரோ, அதற்கும் சற்றும் சளைக்காமல்” “பெண்ணுரிமைக்கும்” தந்தை பெரியார் போராடினார். தந்தை பெரியாரின் ஒரு கண் “சமூக நீதியென்றால் மறுகண், பாலியல் நீதி என்றே கூறலாம் “ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் பெண்களுக்கும் வேண்டும்” என்று எந்தப் பெண்ணும் கேட்காத காலத்திலேயே அவர்களுக்காக வாதாடியவர் தந்தை பெரியார். வீட்டிற்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கும் காலத்தின் கோலத்தை மாற்றி, பெண்களைப் பொது வாழ்க்கையில் ஈடுபட வைத்தவர் தந்தை பெரியார்.

பெண்ணுரிமையை நிலைநாட்டிட தந்தை பெரியார் எந்த எல்லைக்கும் செல்லவும் ஆயத்த
மாகியிருந்தார். “குடும்ப நலம்” என்று வரும்
பொழுது கருத்தடையை ஆதரித்து பலவாறும் அய்யா அவர்கள் எழுதியும் பேசியும் வந்திருக்
கிறார். கருத்தடையைப் பற்றி அய்யா பேசிய காலக்கட்டங்களில் பெண்கள் ஆறு முதல் பத்துக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர். பெண்கள் வீட்டை நிர்வகிப்பதும், உணவு சமைப்பதும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், அவற்றை வளர்ப்பதையுமே கடமையாகக் கொண்டிருந்தனர்.

தந்தை பெரியார் அவர்கள்தான் முதன்முதலாக பெண்கள் பிள்ளை பெறும் இயந்திரங்களா?” என்று கேட்ட பெருந்தகை. கருத்தடையைப் பற்றி பெரியார் அய்யா குறிப்பிடும் பொழுது அதை ஆதரித்த மற்றவர்கள்
கருத்துகளுக்கு மாறான கருத்தையே குறிப்-பிடுகிறார். பெண்கள் உடல் நிலையைப் பற்றியும்,
நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக கருத்தடை தேவை என அவர்கள் குறிப்பிடும் பொழுது அய்யாவோ, பெண்கள் குழந்தைகள் தொல்லையிலிருந்து விடுதலை பெறவும், சுயேச்சையான வாழ்க்கை அமைத்துக் கொள்ள
வும் கருத்தடை அவசியம் எனக் கூறினார்.

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப் பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும் அகால மரணமடைவதற்கும் இந்த கர்ப்பமே காரணமாகிறது. இந்த கர்ப்பத்
தடைக்கு நமது நாட்டில் ஒரு ஸ்தாபனம் எற்படுத்தி அதன்மூலம் துண்டுப் பிரசுரங்
களும், பத்திரிகைகளும், புத்தகங்களும் வெளியிடுவதுடன் கர்ப்பத்தடை சம்பந்தமாக ஆங்கிலத்
திலும், பிற பாஷைகளிலும் அரிய நூல்களை
தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதுடன் கருப்பத்தடையால் நம் பெண்களும், நாடும்
நலத்துடனும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நாடகம், சினிமா முதலியவைகள் மூலம் பிரச்சாரம் செய்யப் பொது ஜனங்களில் சிலராவது
இது சமயம் முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’’ என்றார்.

அய்யா அவர்கள் கூறியபடியே ஒரு ஸ்தாபனம்
ஏற்படுத்த வேண்டும்” என்பதற்கொப்ப, ‘குடும்ப நலத்துறை” என்ற ஒரு துறையும் “மக்கள் நல்வாழ்வுத்துறை என்று ஒரு அமைச்சரின் கீழ் இயங்கி சிறப்பாகச் செயல்படுகிறது. அவர்
கூறியபடியே துண்டுப் பிரசுரங்கள், பத்திரிகை
கள் புத்தகங்கள் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி, மக்கள் நல்வாழ்வுத் துறையால் வெளியிடப்படுகின்றன. கலைத்துறை மூலமும் வெகு
மக்களிடம் இப்பரப்புரைகள் வெற்றிகரமாகச் செய்யப்படுகின்றன. தமிழ் மக்களிடம் சுவரெழுத்துப் பரப்புரைகள் நல்ல வரவேற்பைப் பெறுவதை முன்னிறுத்தி வெற்றிகரமாகச் செய்யப்பட்டன நாம் இருவர், நமக்கு இருவர்” என்ற மிகவும்.

கவனத்தைக் கவர்ந்த சுவரெழுத்துகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றன. இரண்டு குழந்தைகள் என்ற நிலைமாறி,இன்று நடக்கும், “திராவிட மாடல்” ஆட்சியில்ஒரு குடும்பம் ஒரு குழந்தை” என்று பரப்புரை மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு குடும்ப நலத்தை அறிவுறுத்திய அதே நேரத்தில், அரசு மருத்துவமனைகள் மூலம் விலையில்லா கருத்தடைக் கருவிகள் அனைவரும் எளிதாகப் பெறும் வகையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன குடும்பக் கட்டுப்பாடு மருத்துவம் எந்தவிதக் கட்டணமுமின்றி ஆண்_பெண்
இருபாலருக்கும் செய்யப்பட்டன. மிகவும் எளிமையான இந்த சிறிய அறுவை மருத்துவம் கும்ப நலத்தில் செயற்கரிய சாதனைகளை நிகழ்த்தியது. இம்மருத்துவம் செய்து கொண்டவர்-களுக்கு
பணச் சலுகை உட்பட பல சலுகைகள் செய்யப்படுகின்றன.

இரண்டே இரண்டு பெண் குழந்தைகள்
உள்ளவர்களுக்கு அக்குழந்தைகள் மேல் வைப்புநிதி அரசால் போடப்படுகிறது. மானமிகு சுயமரியாதைக்காரர், மாண்புமிகு கலைஞர் முதல்வராகவும், இனமானப் பேராசிரியர் மானமிகு அன்பழகன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும் இருந்த
பொழுது “கருக்கலைப்பு மருத்துவம்’’ (Abortion) சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு பெரும் புரட்சி
சட்டமும் செயல்பாட்டிற்கு வந்தது. அனைத்து முயற்சிகளால் கருத்தடைத் திட்டம் வெற்றி பெற்றது. காரணம் தந்தை பெரியார்! காரியம் திராவிடர் ஆட்சி!