நாஸ்திகர்மகாநாடு

— ஈ.வெ.கி. — சென்னையில் நாஸ்திகர் மகாநாடானது சென்ற டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூட்டப்பட்டது. இது நமது நாட்டிற்கே ஒரு புதுமையானதும், மக்களுக்கு ஒருவித புத்துணர்ச்சியை உண்டுபண்ணக் கூடியதுமாகும். நாஸ்திகமானது தற்காலம் இந்நாட்டிற் சிலருக்கு மட்டில் புதுமையெனத் தோன்றுமாயினும் இது தொன்றுதொட்டே இருந்து வந்திருப்பதாக நம்மவர்களின் புராண இதிகாசங்களால் விளக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக இராமாயண காலத்திலும் நாஸ்திகம், கதாநாயகனான ராமனுக்கு உபதேசிக்கப்பட்டதாகவும், அவனால் மறுக்கப் பட்டதாகவும், அவன் மறுத்துவிட்டதையறிந்த உபதேசிகள் அதற்கு அவனின் இளமைப் பருவந்தான் காரணமென்றறிந்து […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – அகில இந்திய சங்கீத மகாநாட்டில் பார்ப்பனிய விஷமம்

– தந்தை பெரியாரின் சமூக நீதிச் சிந்தனைகள் சென்னையில் கிறிஸ்துமஸ் வாரத்தில் அகில இந்திய சங்கீத மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டுவதாக சில பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து சங்கீத வித்வான்களுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் எழுதியதுடன், அங்கு பாட வேண்டுமென்றும் சில பிரபல சங்கீத வித்வான்களைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுள் தென் இந்திய சங்கீத மணியாகிய ஸ்ரீமான் காஞ்சிபுரம் சி. சுப்ரமணியபிள்ளை அவர்களும் ஒருவர். ஆனால், அவர் பார்ப்பன சங்கீத வித்துவான்களால் பலவித துன்பமும் இடையூறும் அனுபவித்துப் பழகியவரானதால் […]

மேலும்....

தென் இந்திய ரயில்வே ஸ்டேஜன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி ‘குடிஅரசு’ பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்? தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து […]

மேலும்....

கல்பாத்தியும் தெருவில் நடக்க தடையும்

– ‘குடிஅரசு’ ஏட்டின் பதிவிலிருந்து மலையாளம் ஜில்லாவைச் சேர்ந்த பாலக்காடு முனிசிபல் எல்லைக்குள் கல்பாத்தி என்கிற பாகம் பிராமணர்கள் முக்கியமாய் வசிக்கும் பாகம். அது பல தெருக்களை உடையது. அத்தெருக்கள் எல்லாம் முனிசிபாலிட்டியாரைச் சேர்ந்தது. அதைப் பழுது பார்த்தல், பராமரித்தல் எல்லாம் முனிசிபல் செலவிலேயே நடந்து வருகிறது. அப்படி இருந்தும் அங்கிருக்கும் பிராமணர்கள் அத்தெருவின் வழியாய்‘பஞ்சமர்கள்’ என்று சொல்லுவோர்களையும் ‘தீயர்’ என்று சொல்லுவோர்களையும் நடப்பதற்கு விடுவதில்லை. அத்தெருக்களின் முகப்புகளில் உள்ள பல வியாபாரக் கடைகளிலும் பிராமணர்கள் வந்து […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – கடைசிக் கட்டம்

அறிஞர் அண்ணா தீகர்கள், தமக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்த விட்டதாகக் கருதிக் களிப்படைகிறார்கள். நாட்டுக்குக் கிடைத்துள்ள விடுதலையைத், தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சரிந்துபோன தமது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக்-கொண்டு வாழலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இதற்காக, இப்போது, சாஸ்திரிகளும், கனபாடிகளும், தமிழ் இனத்தவரான சில வைதிகர்களும், ஓயாமல், சளைக்காமல், ‘பண்டைப் பண்பாடு’ என்பது பற்றிப் பேசுகின்றனர்.சுயாட்சியை அடைந்துவிட்டோம். எனவே நாம் நமது பரம்பரைப் பண்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று, பேசுகின்றனர். பிரிட்டிஷ் பிடி நீங்கியதும், இதுபோன்றதோர் முயற்சி […]

மேலும்....