பகுத்தறிவு ஒளி பரப்புவோம் ! – முனைவர் கடவூர் மணிமாறன்

பொய்யினை நம்ப வைப்பார்; புரட்டுகள் வேதம் என்பார்; மெய்யினை உணரா வண்ணம் மிரட்டியே மேலோர் கீழோர் உய்ந்திடக் கடவுள், தெய்வம் உயிரினைக் காக்கும் என்றே எய்திடும் கணைகள் தம்மால் இழிவுகள் சுமக்கச் செய்வார்! மருட்டியே மனுநூல் சொல்லும் மந்திரம் வெல்லும் என்பார்! சுருட்டியே பிழைப்போர் நம்மைச் சூத்திரன் என்றே மூட இருட்டினில் கிடத்தி மேன்மை ஏற்றமும் தடுப்பார்! பொல்லா உருட்டலால் பூதம் பேய்கள் உண்டென நாளும் ஏய்ப்பார்! ஆரிய நஞ்சால் நெஞ்சில் ஆரிருள் படரச் செய்தே வீரியம் […]

மேலும்....

நலம் சேர்த்த உயர் தலைவா..!

முனைவர். கடவூர் மணிமாறன் முத்தமிழைக் கற்றுணர்ந்த அறிஞர்; பொன்றா முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற செல்வர்! ஒத்துணர்வால் ஒப்புரவால் உலகம் போற்றும் உயரியநம் தமிழினத்தின் தலைவர் ஆனார்! கத்துகடல் சூழுலகில் எங்கும் வாழும் கவின்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்து வாழ்வில் முத்திரையைப் பதித்தவரோ மொய்ம்பு சோன்ற முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனார்! நூற்றாண்டு விழாவைக்கொண் டாடு கின்றோம்! நுவலரிய அருவினைகள் பலவும் நாளும் ஆற்றியவர்; அண்ணாவின் தலைமை ஏற்ற அடுக்குமொழிப் பேச்சாளர்; பெரியார் தம்மைப் போற்றியவர்; அவர்நினைத்த யாவும் ஆட்சிப் […]

மேலும்....

கவிதை – அயோத்திதாச பண்டிதர்!

முனைவர். கடவூர் மணிமாறன் சாதி எதிர்ப்பின் முதற்போ ராளி நீதியை விழைந்த நேரிய தொண்டர்! அறிஞர் அயோத்தி தாச பண்டிதர் குறிக்கோள் வாழ்வினர் கொள்கை மறவர்; சீர்மிகு திராவிட இயக்கம் முகிழ்த்திட வேர்எனத் திகழ்ந்த வெந்திறல் அரிமா! தமிழகம் என்றும் தலைநிமிர்ந் தெழவே ‘தமிழன்’ “திராவிடன்” எனுமிரு அரசியல் அடையா ளத்தைக் கொடையாய் அளித்தவர் படைமறம் ஏந்திய பான்மை மிக்கவர்; தமிழ்வர லாற்றைத் தகவுற எழுதிய அமிழா நெடும்புகழ் அறிஞர் இவரோ ஒருகா சுக்கும் மதிப்பிலாத் தமிழன் […]

மேலும்....

கவிதை – நெஞ்சில் வெறுப்பை விதைப்பவர்!

முனைவர் கடவூர் மணிமாறன்   மக்கள் ஆட்சியின் மாண்பெலாம் தொலைத்தே மனம்போன போக்கில் நடக்கிறார் – ஒருவர் மதிப்புப் போனதும் துடிக்கிறார்! சிக்கல் நாற்புறம் சேர்ந்துமே வளைத்திடச் செய்வ தறியாது தவிக்கிறார் – பொல்லாச் சினத்துடன் ஆட்சிகள் கவிழ்க்கிறார்! சொன்னதை எல்லாம் காற்றில் விடுகிற சூத்திரம் நன்றாய்க் கற்றவர் – நல்லோர் சொற்களை நடுத்தெரு விற்றவர்! மன்னரைப் போலவே மகுடம் தொடரவே மந்திரப் புன்னகை செய்கிறார்! – ஏழை மக்களோ வரிகளால் நைகிறார்! மூடரின் கைகளில் முடமெனச் […]

மேலும்....

கவிதை: நாடுய்யக் காண்போம் நாமே!

முனைவர் கடவூர் மணிமாறன் அதிகார வாய்ப்பாலே வரம்பு மீறி ஆணவத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு குதிக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மூடக் குழிக்குள்ளே வீழ்ந்தோரோ எழவே மாட்டார்! புதிராக இருக்கிறது; தமிழ்நா டென்றே புகன்றிடவே கூடாதாம்; முகவர் கூற்றை மதியுள்ளோர் ஏற்பாரோ? சட்டம் தன்னை மதிக்காதார் இழைப்பதுவும் மானக் கேடே! எப்படியும் வென்றிடவே வேண்டும் என்னும் எண்ணத்தில் பொழுதெல்லாம் இருப்போர், வீணே செப்பரிய ஏமாற்றுச் செயல்கள் தம்மில் சிறகினையே விரிக்கின்றார்; நாட்டு மக்கள் ஒப்போலை பறிப்பதிலே முனைப்புக் கொள்வார்! […]

மேலும்....