கல்வெட்டு : சோறு சொல்லும் வரலாறு!

தமிழ்க் கல்வெட்டுகளில் எச்சோறு, புள்ளிச்சோறு, திங்கட்சோறு, வரிச்சோறு, வெட்டிச்சோறு, நிசதிச்சோறு, சட்டிச் சோறு என்று பல்வேறு வகையான அடைமொழிகளுடன் சோறு குறிப்பிடப்-பட்டுள்ளது. இவ் அடைமொழிகள் ஒவ்வொன்றும் சோறு வழங்கப்படுவதன் நோக்கத்தைக் குறிப்பனவாகும். எச்சோறு கிராம ஊழியர்களுக்கு இரவில் சோறு போடும் கடமை எச்சோறாகும். நெல் குத்துபவர்களுக்கு இரவில் சோறு இடும் கடமை, ‘எச்சோற்றுக் கூற்று நெல்’ என்றும், ‘எச்சோற்றுக் கூற்றரிசி’ என்றும் குறிப்பிடப்பட்டது. (சுப்பிரமணியன்: தி.நா. 2011:18) பொது ஊழியர்களுக்குப் பகலில் கொடுக்கும் சோறு (ஒரு வரி) […]

மேலும்....

100கிலோ மூட்டையை தானே தூக்கும் அய்ம்பத்தைந்து வயது பெண்ணின் அதிசய உழைப்பு!

“பூ, காய்கறி, பாத்திரம் மட்டுமல்ல… சித்தமருந்துக் கடைகளின் குடோனில் உள்ள மூலிகை, வேர்வகைகள், மரப்பட்டைகள் அடங்கிய 100 கிலோ எடையுள்ள மூட்டைகளைக்கூட அய்ந்து கி.மீ. தூரத்துக்கு அப்பால் உள்ள லாரி செட்களுக்கு தனி ஆளாகச் சென்று ஏற்றி இறக்கி வருவேன்’’ என்று கூறும் சுசிலாமேரி. “திண்டுக்கல் அருகில் உள்ள கோமையம்பட்டி கிராமம்தான் பொறந்த ஊரு. வாக்கப்பட்ட ஊரு திண்டுக்கல் முத்தழகுபட்டி. வீட்டுக்காரர் ஜோசப். இப்ப என் இரண்டு பெண் பிள்ளைகளோட திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் எதிரில் […]

மேலும்....

வாழ்வில் இணைய..

தோழியர் தேவை வயது 31, M.S.W., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.40,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்பு திருமணத்துக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 31, M.Sc., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை. வயது 37, B.A., படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், துணையை […]

மேலும்....

மதத்தைச் சும்மா விட்டுவிட முடியுமா?

கடவுள் இல்லை என்று நிரூபிப்பதற்காக உங்கள் நேரத்தை ஏன் செலவிடுகிறீர்கள்? மக்கள் எதை நம்புவதற்கு விரும்புகிறார்களோ அதை நம்புவதற்கு ஏன் அவர்களை அனுமதிக்கக்கூடாது? மத விஷயங்களில் தலையிடாமல் மதத்தை ஏன் தனியாக இருக்கும்படி விட்டுவிடக்கூடாது? இது போன்ற கேள்விகள் நாள்தோறும் மத நம்பிக்கையாளர்களிடமிருந்து வருகின்றன. கடவுள்  நம்பிக்கையாளர்களை தங்களின்  நம்பிக்கையினைக்  கைவிடச் செய்வது ஏன் மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணத்தை யாராலும் எனக்கு விளக்கிக் கூற முடியாது என்று யூ- டியூப் இணையத்தில் அண்மையில் ஒருவர் கருத்துத் […]

மேலும்....