செய்யக் கூடாதவை

ஜூன் 16-30

போதும் என்பதால் சாதிக்காமல் இருக்கக் கூடாது

சிலருக்குப் பல்துறை அறிவும் ஆற்றலும், நுட்பமும், சாதிக்கும் திறனும் இருக்கும். ஆனால் அவர்கள், இருப்பது போதும். இதைக் கொண்டு, நிறைவாக, நிம்மதியாக, மகிழ்வாக, சிக்கலின்றி வாழ்ந்துவிடுவோம் என்று வீட்டிற்குள் முடங்கிவிடுவர்.

ஆண்களேயன்றி பெண்களும் திருமண-மானவுடன் வீட்டில் ஒடுங்கி விடுகின்றனர். அவர்கள் படித்த உயர்கல்வி, அவருக்குள்ள ஆற்றல், கூர்மை, சாதனைத் திறன் எல்லாம், அடுப்பிலும், அலங்காரத்திலும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது.

ஒருவரை அல்லது சிலரைத் தலைமைக்குத் தயார் செய்து வரவேண்டும். அப்போதுதான் அமைப்போ, இயக்கமோ இவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற வழி செய்யும்.

தமக்குப் பின் சரியான ஆள் இல்லை-யென்றாலோ, அடையாளம் காட்டப்பட-வில்லை யென்றாலோ அந்த அமைப்பு அல்லது இயக்கம், தற்போதைய தலைமைக்குப் பின் சிதையும் அல்லது திசை மாறும் அல்லது திக்குத் தெரியாது தடுமாறும்.

தமக்கு அடுத்தவர்க்குத் தன் காலத்திலே பொறுப்புகள் அளித்தல், பயிற்சி அளித்தல், தன்னுடன் இணைந்து பணியாற்றச் செய்தல், தனக்குப் பதிலாகச் சில பணிகளைச் செய்யச் சொல்லுதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் ஒரு நல்ல வாரிசை வார்த்தெடுக்க முடியும்!

மல்லாந்து அல்லது கவிழ்ந்து படுத்துத் தூங்கக் கூடாது

மல்லாந்து படுத்துத் தூங்கும்போது, நமது தொண்டைக் குழி பாதி அடைத்துக் கொள்கிறது. இதனால் மூச்சுக்காற்று தடை-யின்றிச் செல்ல இயலாமல் போகிறது. கவிழ்ந்து படுத்தாலும் மார்பு, வயிற்று உறுப்புகள் அமுக்கப்பட்டுச் சுவாசித்தல் தடைபடுகிறது. இடப்பக்கம் ஒருக்களித்துப் படுப்பது நல்லது.

ஆனால், நோயாளிகள் நோயின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர் எப்படி படுக்கச் சொல்கிறாரோ அப்படிப் படுக்க வேண்டும்.

பயணம் செய்யும் முன் அதிகம் உண்ணக் கூடாது

பயணத்துக்கு முன் கொழுப்பு உணவு சாப்பிடக் கூடாது. அதிக உணவும் சாப்பிடக் கூடாது. சாப்பிடாமலும் இருக்கக் கூடாது.

சிலருக்குப் பேருந்து அல்லது காரில் செல்லும்போது மயக்கம் வரும். அவர்கள் இதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

இஞ்சி முறப்பா வாயில் அடக்கிக் கொள்வது வாந்தி மயக்கத்தைக் குறைக்கும். புகை வாந்தியை அதிகப்படுத்தும். எனவே, புகை தாக்காத இடத்தில் அமர்ந்து கொள்வது நல்லது.

மயக்கத்துக்கான காரணம் அறிந்து அதற்கு உடனே மருத்துவரிடம் தீர்வு காண்பதே நிரந்தர பயன் தரும்.

இதய நோயாளி திராட்சை சாப்பிடத் தவறக் கூடாது

திராட்சைப் பழச்சாறு இதய நோயாளி-களுக்கு மிகவும் நல்லது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. ரெஸ்வேரெட்டில் என்ற வேதிப் பொருள் திராட்சையின் தோலில் உள்ளது. தோலோடு உண்ணும்போதும், சாறு பிழிந்து உண்ணும்-போதும் இந்த இரசாயனப் பொருள் உடலுக்குள் சென்று இருதய நோய் வராமல் தடுக்கிறது.

அதேபோல் கொய்யாபழம், பப்பாளி, பூண்டு, வெங்காயம், பீன்ஸ், மாதுளை, ஆரஞ்சு, தாமரைப் பூ, கொத்தமல்லி போன்றவை இருதயத்திற்கு வலுவூட்டிக் காக்கக் கூடியவை. இவற்றை நாள்தோறும் உண்ணுதல் நலம்.

மஞ்சள், இலவங்கப்பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை இன்சுலின் செயல்பாட்டை அதிகப்-படுத்தி சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

நின்றுகொண்டு சாப்பிடக் கூடாது

தண்ணீர் குடிக்கும்போதும், உணவு உண்ணும்போதும் நின்று கொண்டு பலர் சாப்பிடுகிறார்கள். இது சரியல்ல. உணவு, நீர் முதலியவை திடீரென்று குடலுக்குள் செல்லும்போது குடலிறக்கம் ஏற்பட இது காரணமாகும். எனவே, நின்று கொண்டு இவற்றைச் செய்யக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே, அமர்ந்துதான் உணவும், நீரும் சாப்பிட வேண்டும். குறைவான அளவு நீரோ, உணவோ சாப்பிடும்போது நின்று கொண்டு சாப்பிடுவதால் பாதிப்பு வராது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *