தகவல்

ஆகஸ்ட் 16-31,2021

புற்று நோய் வராமல் காக்கும் கருப்புத் திராட்சை!

கருப்புத் திராட்சை பல்வேறு மருத்துவக் குணங்களுடன் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் வைட்டமின் டி, மாவுச் சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் அதிகம் உள்ளன. திராட்சை விதையையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், அதன் விதைகளில் உள்ள உட்கூறு, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது மட்டுமல்லாமல், உடலிலுள்ள மற்ற செல்களுக்கு எந்தத் தீமையும் செய்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்களில் அடைப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றை குறைக்கின்றது. ரத்தக் குழாயில் சேர்ந்துள்ள கொழுப்புகளை குறைக்கும் ஆற்றல் மிகுதியாக உள்ளது. இந்த ஆற்றலைக் கண்டறிந்த புகழ் பெற்ற ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனம், தான் தயாரிக்கும் மல்டி வைட்டமின் மாத்திரைகளில், “கிரேப் சீட் எக்ஸ்ட்ராக்ட் (Grape Seed Extract) யும் சேர்த்துள்ளதைக் காணலாம்.

மேலும் இதன் விரிவான விளக்கம், புகழ்பெற்ற கிளினிக்கல் டயக்னாஸ்டிக் ரிசர்ச் ஜர்னலில் (Clinical Diagnostic Research Journal) இரத்தத்தில் உள்ள லிஞிலி என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக்  குறைத்து, பிஞிலி என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நினைவாற்றலை வளர்ப்பதுடன், ஆண்களுக்கு வயதான காலத்தில் வரும் பிராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதுடன், தோல் நோய்களில் இருந்து காத்து, பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகச் செயல்பாட்டில் உள்ள குறைகளைச் சரி செய்கிறது.

கருப்புத் திராட்சை விதையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஷாம்பு, தலையில் ஏற்படும் பொடுகை நீக்குகிறது.

கருப்புத் திராட்சைகளை நன்கு சுத்தம் செய்து விதைகளுடன் நன்றாக மென்று சாப்பிட்டால் நலமுடன் வாழலாம். 


சமஸ்கிருதப் படிப்பின் பரிதாப நிலை!

ஹிந்தியும் சமஸ்கிருதமும்

‘தினமலர்’ சிறுவர் மலர் 7.8.2021 சமஸ்கிருதத்தை யாரும் விரும்பிப் படிக்கவில்லை. கட்டாயப்படுத்திதான் படிக்க வைக்கிறார்கள் என்பதற்குத் ‘தினமலரே’ சாட்சாத் சாட்சியம்.


பெரியார் குரல்

பெண்ணின் உடல் சார்ந்த உரிமை குறித்த விவாதம் சிறந்த முன்னெடுப்பு. முதலில் பெண்கள் புனிதம், தாய்மை, பெண்மை போன்ற அபத்தங்களை உடைக்க வேண்டும். ‘உன் முன்னேற்றத்தைக் குழந்தைப்பேறு தடுக்கும் என்றால் கர்ப்பப்பையை அறுத்து எறிந்துவிடு’ என்று பெண் முன்னேற்றம் குறித்து எழுதியவர் பெரியார். இதை விளங்கிக் கொண்டால் பெண் ஏன் அடிமையானாள் என்று புரியும்.

(‘தி தமிழ் இந்து’ 25.7.2021)


¨             மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்ற எடிசன்தான் வாழ்நாளில் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

¨           விமானத்தில் இருக்கும் கருப்புப் பெட்டி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

¨           ஒலிம்பிக்கில் வழங்கப்படும் தங்கப் பதக்கம் வெள்ளியால் தயாரிக்கப்படுகிறது. இப்பதக்கத்தில் 6 கிராம் தங்கத்தால் முலாம் பூசப்படுகிறது.

¨           பட்டாம்பூச்சிகள் தங்கள் உடலில் உள்ள சிறு துளைகள் மூலம் மூச்சு விடுகின்றன.


பிள்ளைகள் தொல்லை

23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் பேசினார்.

“மக்கள் பிறப்புகூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்துவிடும். மனிதன் வெகுசுலபமாக நூறு ஆண்டுகள் வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று  இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். ஆண் பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பேறுக்கும் சம்பந்தம் இல்லாமலேயே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டி போடுகிற _ போடச் செய்கிற குதிரை வேறு, என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளைப் பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்கு சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

(‘குடிஅரசு’ 30.1.1938, பக்கம் 15, 16)   


மக்கள் பேற்றை அடக்கி ஆளுதல்

குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல்நலனை முன்னிட்டும் கர்ப்பத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்கு மேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உரிமையாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது; தேவைப்பட்டால், இதற்கான தனி சட்டத்தையும்கூட மத்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் இம் மாநாடு வலியுறுத்துகிறது.

(19.3.2007இல் திருவொற்றியூரில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டுத் தீர்மானம்)


¨             பட்டாம்பூச்சிகள் தங்கள் கால்களின் மூலம் சுவைகளை அறியும்.

¨           ரோஜாப் பூவில் வைட்டமின் ‘சி’ உள்பட பல்வேறு சத்துகள் உள்ளன.

¨           மனிதர்கள் கோபப்படும்போது ‘அட்ரினல்’ என்னும் சுரப்பு உடம்பில் சுரக்கிறது.


அரசு முத்திரையும் வண்ணங்களும்

               சாரநாத் அசோக ஸ்தூபியில் அமர்ந்த நிலைச் சிங்கங்களே இந்திய அரசின் முத்திரையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முத்திரைகள் இந்திய ஒன்றிய, மாநில அரசுகளின் நோக்கங்களுக்கே பயன்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் சிவப்பு வண்ணத்திலும், மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் முத்திரை இருக்கும்.


  

2010ஆம் ஆண்டு ‘அய்க்கிய நாடுகள் சபை’ அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 ‘உலக மாணவர் தினம்’ என்று அறிவித்தது.  2005ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு விஜயம் செய்த கலாமின் நினைவை அடையாளப்படுத்தும் விதமாக மே 26ஆம் தேதியை அந்நாடு  ‘அறிவியல் தினம்’ என்று கொண்டாடி மகிழ்கிறது.


சமநிலையற்ற வளர்ச்சியே நிகழ்ந்தது!

தாராளமயமாக்கல் காரணமாக வளமும் வளர்ச்சியும் இந்தியாவுக்குக் கிடைத்தது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள் பலர். ஆனால், ‘இது எல்லோருக்கும் கிடைத்ததா’ என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதில். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். எதிர்பார்த்த அளவுக்கு ஏழ்மை ஒழியவில்லை. கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படைச் சேவைத் துறைகளில் தனியாருக்குக் கதவுகள் திறக்கப்பட்டதால் சேவையின் தரம் உயர்ந்தது. ஆனால், எளிய மக்களுக்கு இதனால் செலவுகள் அதிகரித்தன. இது இந்தியாவில் மட்டும் என்றில்லை, பொருளாதார மாற்றங்களை அமல்படுத்திய வளமான நாடுகளிலும்கூட ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஏற்படுத்திய பேரழிவு இதை அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பாகுபாடு அதிகரித்துக்கொண்டே போவதை ஆக்ஸ்ஃபாம் அமைப்பு வெளியிடும் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.‘The Inequality Virus’என்று பெயரிடப்பட்ட 2021-ஆம் ஆண்டுக்கான ஆக்ஸ்ஃபாம் அறிக்கை பல கசப்பான உண்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. கொரோனா ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியில் ஏழைகள் தவித்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஆக்ஸ்ஃபாம் அறிக்கை.

“இந்தியாவின் அடித்தட்டில் இருக்கும் 10 சதவிகித ஏழைகளுக்கு இன்னமும் கண்ணியமான வாழ்வை நம்மால் தர முடியவில்லை. இவர்களுக்கு இலவசங்கள் கொடுப்பதும், மானியங்கள் அளிப்பதும் மட்டுமே தீர்வு இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் போன்ற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் எல்லாமே தற்காலிக ஏற்பாடுகள்தான். ஒரு குடும்பம் 200 ரூபாய் தினசரி வருமானத்தில் வாழ்ந்துவிட முடியாத சூழலில்தான் விலைவாசி இருக்கிறது. நிரந்தர வருமானம் அளிக்கும் திட்டங்களே அவர்களை உயர்த்தும்’’ என்கிறார், ‘கேர்’ ரேட்டிங் அமைப்பின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் மதன் சப்னாவிஸ்.

(‘ஆனந்த விகடன்’ – 11.8.2021)


இந்தியாவின் முதல் பெண் நிலத்தடி சுரங்க மேலாளர்

இந்துஸ்தான் சின்க் நிறுவனம், இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் நிலத்தடி சுரங்க மேலாளராக சந்தியா ரசகத்லாவையும், நிலத்தடி சுரங்க மேம்பாட்டு மேலாளராக யோகேஸ்வரி ரானேவையும் நியமித்துள்ளது. சுரங்க சட்டம் 1952இன்படி  2019இல் செய்யப்பட்ட திருத்தங்களில், பெண்கள் முறையான சான்றிதழ்களைப் பெறும் பட்சத்தில் எந்தவிதமான சுரங்கத்திலும் (நிலத்திற்கு மேல், நிலத்திற்குக் கீழ்) பணியாற்றலாம் என்றது. இச்சட்டத்தின்படி சந்தியாவும், யோகேஸ்வரியும் முறையான பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

பெண்களுக்குத் தேவையான எண்கள்!

*       பெண்களுக்கான அவசர உதவிக்கு

1091

*        பெண்கள் மீதான வன்கொடுமைக்கு

181

*        தேசிய பெண்களுக்கான ஆணையம்

011 26944754, 26942369

*        குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு 1098

*        பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனால் 1094

*        மன உளைச்சலால் பாதிப்புக்குள்ளாகும் பெண்களுக்கு  99115 99100

*        தமிழ்நாடு பெண்கள் ஆணையம்

044 28592750

*        தமிழ்நாடு பெண்கள் உதவி எண்

044 28592750

*       ராகிங் தொல்லைக்கு 155222


 

லஞ்சத்தை ஒழிப்போம்!

தற்போதைய தமிழக அரசைப்பற்றி பலருக்கும் தெரியவில்லை. இறையன்பு அவர்கள் தலைமைச் செயலாளராக இருக்கிறார் என்றால் லஞ்சம் ஊழலுக்கு என்றுமே ஆதரவு தரமாட்டார். லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட் கிடையாது. டிஸ்மிஸ் என சொல்லியிருக்கிறார். பலரும் நம்ப மறுக்கிறார்கள். லஞ்சம் வாங்குபவர்களை தயங்காமல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மாட்டி விடுங்க.

அல்லது ஆதாரத்துடன் முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்புங்க:

cmcell@tn.gov.in

 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *