புதுவை முதல்வர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்களின் வாழ்த்துச் செய்தி

டிசம்பர் 01-15

பெரியார் வாழ்வில் பணியினைத் தொடர்ந்திட
வாழ்த்திகிறேன்!


பெரியார் இயக்கத்தைச் சேர்ந்த கருஞ்சட்டைத் தோழர்களும், நலம் விரும்புவோரும், பற்றாளர்களும் திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 84ஆம் பிறந்த நாளை (02.12.2016) ‘சுயமரியாதை நாள்’ ஆகக் கொண்டாடுவது குறித்து பெரும் மகிழ்வு கொள்கிறேன்.

தமது 9ஆம் வயதில் பொதுவாழ்வைத் தொடங்கிய கி.வீரமணி அவர்கள், பெரியாரின் மனிதநேயச் சிந்தனை வழி, அவரின் அடிச்சுவட்டில் ஈடு இணையற்ற தொண்டுப் பணியை இயக்கரீதியாக உலகில் எங்கும் இல்லாத வகையில் மனித சமுதாயத்திற்கு ஆற்றி வருகிறார்.

 

முழு முனைப்போடும், ஆர்வத்தோடும் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் பெரியாரின் மனிதநேயம் மிக்க சயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளை உலக அளவில் டாக்டர் கி.வீரமணி பரப்பி வருகிறார்.

சமூகநீதியை நாடு முழுவதும் நிலைநிறுத்துவதற்காக, டாக்டர் கி.வீரமணி அவர்களால் வழிநடத்தப்படும் பெரியார் இயக்கம் ஈடுஇணையற்ற பங்களிப்பைச் செய்துவருகிறது.

பெரியார் தொடங்கிவைத்த மனித மேன்மைக்கான அமைப்பு ரீதியிலான தொண்டறப் பயணத்தை மேலும் அவர் தொடர, 02.12.2016இல் அவரது 84ஆம் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிகழ்வில், எனது வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்துக்-கொள்கிறேன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *