அம்பேத்கர் பேசுகிறார்

நவம்பர் 01-15

 

 

 

“இந்து சட்ட முன்வடிவை’’ நாடாளு-மன்றத்தில் 1949ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி சட்ட அமைச்சர் அம்பேத்கர் முன்மொழிந்து பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்.

“இந்தச் சட்ட முன்வடிவைப் புரட்சிகரமான நடவடிக்கை எனக் கூற முடியாது. மேலும், இது அடிப்-படையையே மாற்றியமைக்கிற கோட்பாடு என்றும் சொல்ல முடியாது. திருமண உரிமைகள், நீதிமன்ற திருமண ரத்து, தத்து எடுத்தல், வாரிசு நிலை போன்றவற்றில் தலைகீழ் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. திருமணச் சட்டத்தைப் பொறுத்தவரை எந்த வகையான திணிப்பும் இல்லை. தர்மத்தைப் பின்பற்றும் வைதீகர்களுக்குச் சரியெனப்-படுவதைச் செய்யலாம். ஆனால், தர்மத்தைப் பின்பற்றாமல் மனசாட்சி-யையும், பகுத்தறிவையும் பின்பற்றும் சீர்திருத்தவாதிகள் அவர்களுக்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து கொள்ளலாம்.

புதிய பாதையில் நடைபோடு-கிறவர்களே இறுதியாக வெல்வார்கள் என நம்புவோமாக. மாபெரும் அரசியல் அறிஞரான பர்க், பிரஞ்சுப் புரட்சிக்கு எதிரான தனது நூல் “பழமையைப் பாதுகாக்க விரும்புபவர்கள் பழுது பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.’’

நான் இந்த அவையில் கூற விரும்புவது என்னவென்றால், “இந்து அமைப்பு, இந்து கலாச்சாரம், இந்து சமுதாயம் ஆகியவற்றைப் பாதுகாக்க விரும்புவீர்-களானால் பழுது பார்க்க வேண்டிய அவசியம் இருந்தால் ஒருபோதும் தயங்காதீர்கள். சீர்குலைந்து போயிருக்கும் இந்து அமைப்பைப் பழுதுபார்க்கவே இச்சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *