நமக்கு முழு அறிவு தரும் ஒரே நூல் திருக்குறள்! – பெரியார்
நேயன் பேரன்பு மிக்க தலைவர் அவர்களே! தோழர்களே!! தாய்மார்களே!! இம்மாநாடு திருவள்ளுவர் பேரால் கூட்டப்பட்டிருப்பதையொட்டி, திருவள்ளுவர் பற்றியும் அவரது குறளைப் பற்றியும் பேசுவது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். ஆரியரல்லாத இந்நாட்டு மக்கள் அனைவர்க்கும், சிறப்பாக இந்நாட்டுப் பழங்குடிப் பெருமக்களான திராவிடர்கள் அனைவர்க்கும் வள்ளுவர் அருளிய திருக்குறள் ஒரு பெரிய செல்வமேயாகும். நமது பெருமைக்கும், நெறிக்கும் (மதத்துக்கும்), நாகரிகத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் எடுத்துக்காட்டாக அதில் பல சங்கதிகளை நாம் காணலாம். திருக்குறளின் பேரால் நம் பெருமையை, […]
மேலும்....