மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்பந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கிக் கண்டித்து வருவதில் வைதிகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அநேகருக்கு மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாற்போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும், பார்ப்பனர்களும் நம்மைப்பற்றி இம்மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரச்சாரமும் செய்து வருவதால், அவசரப்பட்டு மிகவும் விபரீதக் கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப்பட்டவர்களும், “பழக்கம்”, “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாகக் கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தனவைசிய நாடு என்கிற நாட்டுக்கோட்டை செட்டியார்கள் […]

மேலும்....

தனித்து-தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு! – முனைவர் வா.நேரு

ஒரு நாடு முன்னேற வேண்டுமானால், வளர்ச்சியை நோக்கிப் பயணமாக வேண்டுமென்றால் அதற்கான அடிப்படைத் தேவை அமைதி, ஒற்றுமை. ஒற்றுமைக்கும், அமைதிக்கும் அடிப்படை ஒருவரை ஒருவர் மதித்தல். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதித்து மரியாதை கொடுத்தல், அதன்மூலம் மரியாதையைப் பெற்றுக்கொள்ளுதல். இதற்கான அடித்தளத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர்,பரப்பியவர் தந்தை பெரியார் அவர்கள். அதற்கு அடிப்படையாக அமைந்தது சுயமரியாதை இயக்கம். அடுத்த ஆண்டு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாடு இந்திய […]

மேலும்....

உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும். முன்னுரை 1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது. […]

மேலும்....

இளைய சமுதாயமே!எச்சரிக்கை! விழிப்போடு இரு!! – மஞ்சை வசந்தன்

இளைய சமுதாயம்தான் எதிர்கால உலகைக் கட்டமைத்து அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கும் பொறுப்புடையது. இளைய சமுதாயம் என்பதில் ஆண், பெண், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லாம் அடக்கம். நூறு ஆண்டுகளுக்குமுன் 30 வயது வரையில் கூட ஏதும் அறியாதவர்களாக வாழ்ந்தனர். தீய, கெட்ட வழக்கங்கள் அப்போது அதிகம் இல்லை. பெற்றோர், ஆசிரியர்கள், பெரியவர்கள் கூறுவதை ஏற்று நடந்தனர். பாலுறவு, போதை, களவு, பொய், ஏமாற்று என்று அதிகம் இல்லாமல் அப்போதைய இளைய சமுதாயம் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன் கல்வி, […]

மேலும்....

இந்த வள்ளுவருக்கா காவி ? – சிகரம்

தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பரந்த நிலப்பரப்பில் ஆரியர்கள் அண்டிப் பிழைக்க நுழைந்தார்கள். முதலில் தமிழர்களிடம் பிச்சையெடுத்துப் பிழைத்தார்கள். பின் சடங்கு செய்து அதற்குத் தட்சணை பெற்றுப் பிழைத்தார்கள். ஆக, அவர்கள் உழைத்துப் பிழைத்தவர்கள் அல்ல. அதேபோல், தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி, திரித்து, மாற்றி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய இந்தக் கைப்பற்றும் முயற்சி இன்றளவும் நடந்துவருகிறது. முதலில் தமிழர் நிலத்தைக் கைப்பற்றினர், பின்பு தமிழ் மொழியைக் களவாடிச் சமஸ்கிருதத்தை உருவாக்கினர்; தமிழ்மொழியைச் சிதைத்தனர். அடுத்து நம் […]

மேலும்....