ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்

ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் 10.3.1934ஆம் நாளில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள படூரில் பிறந்தார். தந்தை வி.தி.பொன்னுசாமி. தாய் அங்கம்மாள். இவர் எஸ்.எஸ்.எல்.சி. (11 ஆம் வகுப்பு)வரை கல்வி பயின்றார். மூன்றரை வயதில் தந்தை பெரியாரின் மடியில் அமர்ந்து மழலையில் பேசி அவருடைய அன்புக்குரியவரானார். 1956 இல் ‘டார்ப்பிடோ’ என்று சிறப்புடன் அழைக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத் தூணாக விளங்கிய ஏ.பி.ஜனார்த்தனத்தை வாழ்விணையராக ஏற்றார். தந்தை பெரியார் தன் சொந்தச் செலவில் இவர் திருமணத்தை நடத்தினார். 1957இல் பிராமணாள் பெயர்ப் […]

மேலும்....

சோதிடம் பற்றி விவேகானந்தர் கூறியவை:

‘சஞ்சலம்’ உள்ள நெஞ்சின் புனைவுதான் சோதிடம். சோதிடத்தில் ஆர்வமும், அதன்மீது காதலும் உள்ளவர்கள், உடனடியாக மனநல மருத்து வரை அணுகுவது நல்லது. நல்ல உணவும், ஓய்வும் அவர்களுக்கு அவசியம். – விவேகானந்தர் (ஞானதீபம்)

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (113)

வேதத்தில் தமிழ்க் கடவுளா? நேயன் ரவிந்தன் நீலகண்டன், வேதத்தில் தமிழ்க் கடவுள் பற்றிய குறிப்பு இருப்பதாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார். தமிழ்க் கடவுள் என்றாலே அது முருகன் தான். முருகன் குறித்த மிகப் பழமையான தொன்மங்களிலேயே, அவன் சிவந்த மேனியுடையவனாகக் காட்டப்படுகிறான். கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், மொழியியல் அறிஞருமான ராமச்சந்திரன், ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ எனும் தனது முக்கியமான கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் – சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும். நிறத்தில் […]

மேலும்....

சீனி. வேங்கடசாமி

இல்லற வாழ்வு தமிழ்ப் பணிக்கு இடையூறாக அமையும் என்ற அச்ச உணர்வினால் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்டு வாழ்ந்த சீனி.வேங்கடசாமி அவர்கள் 16.12.1900ஆம் நாள் மயிலையில் பிறந்தார். புனித தோமையர் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று பின் ஆசிரியப் பயிற்சி பெற்று 1942இல் மயிலை நகராண்மைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தெ.பொ.மீ, சற்குணர் போன்றோரிடம் தமிழ் பயின்றார். சிறந்த தமிழ்ப் பணியாற்றினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவுச் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: முதல்வரின் ஆளுமைத்திறன் சாதிக்கும்!

கே : அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் குஜராத் நீங்கலாக மற்றவற்றில் பா.ஜ.க. படுவீழ்ச்சியைப் பெற்றுள்ளதை மதச்சார்பற்ற அணிக்கு நம்பிக்கை தரும் செய்தியாகக் கொள்ளலாமா? – ரங்கநாதன், தாம்பரம். ப : நிச்சயமாக –_ மக்கள் பெரிதும் உணர்ந்துள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன- — _ குஜராத் முடிவுகள் வித்தைகள் மூலமே என்று !விரிவாக அறிய விரும்பினால் 9.12.2022 ‘விடுதலை’யில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள். கே : அய்யா, 90 வயதைத் தொடவிருக்கும் தாங்கள் இளைய சமுதாயம் எதில் […]

மேலும்....