முகநூல் பேசுகிறது

ஜூலை 16-31

இன்று இண்டு நாளிதழ் படிக்க நேர்ந்தது. மொத்த பொறியியல் விண்ணப்பத்தில் பாதி விண்ணப்பதாரர்கள் முதல் தலை முறையாக கல்லூரியில் காலடி வைக்கப்போகிறார்களாம்….

சொதந்திரம் வாங்கி 65 வருடத்திற்குப் பிறகும் இவ் அவலம் தொடர்கிறது…

உழைக்கும் மக்களில் 80 %க்கு மேல் உள்ள தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சந்ததிகளின் நிலையிது…

நீதிக்கட்சி போராட்டம்….

திராவிடர் கழக போராட்டம்….

அய்யா பெரியாரின் போராட்டம்…

சமூக நீதிக்கான அமைப்புகளின் போராட்டத்திற்கு பிறகும்….

கிண்டல் செய்ய….

விமர்சன்ம் செய்ய…

பெரியார் இருக்கிறார்…

பலனை அனுபவித்தவர்கள்

கும்மியடியுங்கள்…

 

 

 

– மணிவர்மா 26 ஜூன் 2012 இரவு 7:18 மணி


தி.மு.க.வின் சிறை நிரப்பும் போராட்டம் புஸ்ஸ் என்று தின மலம்(ர்) செய்தி வெளியிட்டிருக்கிறது, அதாவது 1.50 கோடி பேர் தங்கள் கட்சியில் இருப்பதாக தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சொல்வாராம். ஆனால் நேற்று (4/07/2012) நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் வெறும் 2.30 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அது வெறும் 1.53% மட்டுமே என்றும் அதனால் அந்த போராட்டம் தோல்வி என்ற கருத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. நாம் அனைவரும் தின மலத்தைப் பார்த்து இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். அதாவது தமிழகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் 90% பேர் இந்துக்கள் இருப்பதாக பீற்றிக்கொள்ளும் தினமலம் மற்றும் இந்து மதவெறி அமைப்புகளான பி.ஜே.பி, இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கும், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுக்கும் ஏன் 0.0000000001% பேர் கூட கூடுவதில்லை, அப்படியானால் தமிழ் நாட்டில் இந்து மதம் புஸ்ஸோ புஸ்தானே! பரவாயில்லையே உண்மையை இப்படியும் ஒத்துக்கொள்ளலாமா?

 

 

 

நான் திராவிடன் 5 ஜூலை 2012 மதியம் 1:13 மணி


அப்பாடா, சச்சினுக்கு வாரிசு வந்தாச்சு… மகன் அர்ஜூனுக்கு கிரிக்கெட் அணியில் இடம்! – செய்தி

இதை எல்லாம் யாரும் கண்டுக்க மாட்டங்களே!!!!!

நாங்க மிசாவிலே அடிப்பட்டு, கிட்டதட்ட 40 ஆண்டுகள் அரசியலில் போராடி ஒரு பொறுப்புக்கு வருவதை “வாரிசு அரசியல்” என்று கேவலமாக பேசுவதை எப்படி சொல்வது?!

 

 

 

– சிவக்குமார் 26 ஜூன் 2012 இரவு 7:12 மணி


வாகனம் ஓட்டும்போது கால் வந்தால் கட் செய்துவிடுங்கள்! இல்லையெனில் மருத்துவர் உங்கள் காலை கட் செய்யும் நிலைகூட வரலாம்!

 

 

 

– கார்த்திகேயன் பாலசுப்பிரமணியம் 27 ஜூன் 2012 மாலை 4:36 மணி


என்னய்யா… செஞ்சே… எனக்கு வாந்தி வாந்தியா வருது …
வீரன் வெற்றி வீரன் 4 ஜூலை 2012 11:33 மணி


கடவுளுக்காகக் காத்திருக்காதீர்கள்! பெண்கேலி என்று புகார் செய்யுங்கள்!

 

 

 

– அ.செ.செல்வம் 24 ஜூன் 2012 மாலை 4:03 மணி


கோயில் சொத்துகளை பாதுக்காக்க இந்து முன்னணி போராடும் — இராமகோபாலன்
???????????
கோயிலின் உள்ளே இருக்கிற மேலாளர்களை (சங்கர் ராமன் )
பாதுகாக்க போராடுமா???!!!
உங்கள் முன்னணியின் பின்னணி பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும் …

 

 

 

–  பனங்காட்டு நரி 4 ஜூலை 2012 மதியம் 12:18 மணி


இல்லாத இறைக்கு எல்லாம் செய்த நாம்…!
இரையில்லா மக்களுக்கு என்ன செய்வதென்று மறந்தோம்!

 

 

 

– அர்ஜுனன் ரமேஷ் 8 ஜூலை 2012 இரவு 10:57 மணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *