சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

2024 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் ஜனவரி 1-15, 2024

தமிழை வளர்த்தனரா பார்ப்பனர்கள்?

நூல் குறிப்பு :
நூல் பெயர் : ‘வெறுக்கத்தக்கதே பிராமணீயம்!’
ஆசிரியர் : கி. வீரமணி
வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
பக்கங்கள் : 160
நன்கொடை
(குறைந்த அளவு) : ரூ.150/-

தமிழுக்காகத் தொண்டு செய்யும் பார்ப்பனர்களைப் பட்டியலிட்டுக் காட்டி  – இவர்களையா எதிர்ப்பது என்று தோள் தட்டுகிறார் திருவாளர் ‘சோ’ ராமசாமி.
பார்ப்பனர்கள் தமிழுக்குத் தொண்டு செய்ததைவிட துரோகம் செய்ததும், இழிவுபடுத்-தியதும் இடைச் செருகல் செய்ததும்தான் அதிகம்!

இவர்கள் பெரிதாக உயர்த்திப் பிடிக்கும் உ.வே.சாமிநாதய்யரே கூட பார்ப்பனர்கள் தமிழுக்குச் செய்து வரும் இழி செயலை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றால் பலருக்கும் ஆச்சரியமாகக்கூட இருக்கும். ஆனாலும் அவர் கூறியிருக்கிறார் என்பது மட்டுமே உண்மை.
பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதய்யர்வாள் கூறிய இந்தச் செய்தி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் (ஏப்ரல் 1974) வெளிவந்துள்ளது.
(சிலம்பு 47 – பரல் 9)

“தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்து கொண்டு தமிழைத் தாழ்த்தி அடக்கியும், சமஸ்
கிருதத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை, அண்ணாமலை என்னும்
இரு பல்கலைக் கழகங்களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத்துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்து வருவதால், தமிழர்கள் தங்கள் தாய்
மொழியின் நிலையை உயர்த்துவதற்கு ஒன்றுமே செய்ய முடியாதவராயிருக்கின்றனர். பார்ப்பனர்களில் ஒரு சிலர் தமிழருக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர்.”

_ இவ்வாறு சொன்னவர் தமிழ்த் தாத்தா என்று கூறப்படும் உ.வே.சா.தான். சாட்சியோ பண்டித மணி மு.கதிரேசன் செட்டியார்.
‘சோ’ கூட்டம் போற்றும் ஒரு பார்ப்பனரே பார்ப்பனர்கள் தமிழுக்குத் தீங்கு விளைவிப்பதுபற்றி விண்டுரைத்தபின் ‘சோ’க்களிடம் பதில் கூறிட என்ன இருக்கிறது?
மற்ற பார்ப்பனர்கள் தமிழுக்குத் துரோகம் செய்கின்றனர் என்று இவ்வாறு கூறும் அதே உ.வே.சாமிநாதய்யர்கூட சங்க இலக்கியங்களில் பார்ப்பனீயத்தை இடைச் செருகல் செய்யத் தயங்கவில்லை என்பதுதான் உண்மை.

புறநானூறு உட்பட்ட சங்க இலக்கியங்களில் இவர் புகுந்து விளையாடிய விவரங்களை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் “ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்” என்னும் நூலில் விரிவாகவே ஆய்ந்து விவரித்துள்ளார். அதன் ஒரு பகுதி இதோ!

புறநானூற்றில் “ஆன்
முலையறுத்த” – என்று தொடங்கும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல்,
யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் ‘அறவோர்’ என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள்ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் ‘பார்ப்
பார்’ என்று குறிக்கப் பெற்றுள்ளது. பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. ‘அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா’தெனும் அறங் கூறும் அவ்வடி, ‘பார்ப் பார்க்குக் கொடுமை செய்தல் கூடா’தென்பதாக இவர் பதிப்பில் காட்டப்பெற்றதும், அதற்குக் ‘கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை’ எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப்பதும், இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப்பெற்ற கருத்து மேலும் மேலும் வலியுற வேண்டும் என்னும் உள்நோக்கம் இவருக்கு இருப்பதை நன்கு புலப்படுத்தும். மேலும் அதில் உள்ள 305ஆம் பாட்டில் உள்ள ‘தன்மை’ என்னும் ஒரு

சொல்லுக்கு ‘அவரவர் சாதி இயல்பு’ – _என்று விளக்கம் எழுதியுள்ளார்.
இனி, இவர் உரையுடன் வெளியிட்ட குறுந்தொகை ‘முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்’ எனும் 67ஆம் பாட்டின் உரை விளக்கத்தில் நச்சினார்க்கினியரின் (அவரும் ஒரு பார்ப்பனர்) தொல்காப்பிய உரையைச் சுட்டிக்காட்டி, ‘இப்பாட்டிற் கூறப்படும் உணவு வகையினால் நச்சினார்க்கினியர், பார்ப்பானையும், பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது எனக் கொண்டனர் போலும். பெரும்பாணாற்றுப் படையில் அந்தணர்மனையில் பாணர் பெறும் உணவைப் பற்றிக் கூறியிருக்கும் பகுதி இங்கே ஆராய்தற்குரியது’ என்றும்,

‘அறிவுடையீரே’ என்று தொடங்கும் குறுந்தொகை 206ஆம் பாட்டின் அடியில், ‘பார்ப்பனப் பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது” என்றும்,
“ஆசில் தெருவில்” என்று தொடங்கும் 277ஆம் பாட்டின் சிறப்புரையில், ‘ஆசில்’ (குற்றமற்ற) தெருவென்றும் நாயில் (நாய் இல்லாத) வியன்கடை யென்றும் சிறப்பித்தமையால், இங்கே கூறியது அந்தணர் தெருவென்று ‘தோன்றுகின்றது’ என்றும் எழுதி, ‘பார்ப்பாரிற் கோழியும் நாயும் புகலின்னா’ எனும் (இன்னா 3) அடியையும், ‘அந்தணர் அமுதவுண்டி’ (கம்பர்) எனும் பாட்டடியையும் மேற்கோளாகக் காட்டியுள்ளார். இவர் இவ்வாறு காட்டுவதன் நோக்கம், கழகத் தமிழ் இலக்கியங்களில் ஆங்காங்கே ஆரியக் கருத்துகளை வலியுறுத்திக் காட்ட வேண்டுமென்னும் உட்கோளேயாகும்.

தமிழ் மொழிக்கு மிக உழைத்தவரெனச் சொல்லப் பெறும் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்மொழியின் தனிச் சிறப்பைப் பலவிடங்களில் தாழ்த்தியுள்ளது கவனிக்கத்தக்கது. கழக நூற்பதிப்புகளுக்காக அவர் ஊர் ஊராய் அலைந்ததும், அவற்றைத் திரட்டி ஆராய்ந்து அச்சிட்டதும் அவர் பெருமையை நன்றியுடனும் நினைக்கப் போதுமான அரிய வினைப்பாடுகள் எனின், அந்நூல்களிலெல்லாம் ஆரிய நச்சுக்கருத்துகளைத் தக்கவிடத்தில் மறவாது வைத்துப் போனதும் இவரின் இயல்பான இனவுணர்வை மறவாதிருக்கச் செய்யும் நினைவாகும். தமிழ்மொழி மேல் இவருக்கு ஒருவகைப் பற்று உளதென்றால், அஃது ஆரியத்தைக் கலப்பதற்கு ஏற்ற ஒரு கருவியாக உள்ளதெனும் மாற்றாந் தாய்ப் பாசமே என்க.

பரிமேலழகர், திருக்குறளை எவ்வாறு தம் இனக் கருத்துகளை ஊன்றுவதற்கு ஏற்ற ஒரு விளைநிலமாக எடுத்துக் கொண்டாரோ, அவ்வாறே உ.வே.சா. கழகப் பதிப்புகளைக் கைக்கொண்டார். இன்றியமையாத சொற்களையெல்லாம் வடமொழியாகவே இவர் பயின்றார். பண்புகள் அல்லது குணங்கள் என்று குறிப்பதால் நிறைவுறாத இவர், குணவிசேடங்கள் என்று குறிப்பதால் மன நிறைவுறுவார். மைசூர் நாடு என்று குறிக்காமல் மைஸுர் ஸமஸ்தானம் என்றே குறிப்பார். மேலும் அரசுக்கட்டில் என்பதைச் சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை நட்சத்திரம் என்றும், மருத்துவம் என்பதை வைத்தியம் என்றும், வள்ளல் என்பதை உபகாரி என்றும், இளம் பருவம் என்பதை இளம்பிராயம் என்றும், படிகள் என்பதை பிரதிகள் என்றும், முற்றூட்டு என்பதை ஸர்வமானியம் என்றும், கல்வெட்டு என்பதை சிலாசாசனம் என்றும், சான்று என்பதை ஆதாரம் என்றும், நகைகள் என்பதை ஆபரணங்கள் என்றும் கொடி என்பதை துவசம் என்றும், போர் என்பதை யுத்தம் என்றும், பயன்படுத்துதல் என்பதைப் பிரயோகங்கள் என்றும் பலவாறு வடசொற்களைப் பெய்து எழுதுவதில் இவர் பெருமகிழ்வுற்றதாகத் தெரிகிறது.

அவ்வாறு தமிழ்மொழியோடு வடசொற்களை பெய்து எழுதுவதால் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் துணையின்றித் தமிழ் இயங்காது என்பது வலியுறுத்தம் பெறல் வேண்டும் என்பது இவர் கொள்கையாக இருக்கலாம். இவர் இதனை, ஒரு கொள்கையாக வலிந்தே கையாண்டுள்ளார் என்பதற்குப் புறநானூற்றுப் பதிப்பின் உரையின் இயல்பு என்னும் பகுதியில் ‘வடசொல்லாட்சி’ என்னும் தலைப்பிட்டு, அப்புறநானூற்று உரையாசிரியரின் உட்கோளை இவர் கண்டுகொண்டதாக எழுதும் பகுதியே அழுத்தமான சான்றாகும். அப்பகுதியில்,

“இவரது உரைநடை பெரும்பாலும் செந்தமிழ்ச் சொல் நிறைந்ததாக இருப்பினும் ஓரோரிடங்களில் சில தமிழ்ச் சொற்களுக்கு வட சொற்களைக் கொண்டு இவர் பொருள்
எழுதியுள்ளார். கடனென்பதற்குப் பிண்டோதக்-கிரியை யென்றும் மருந்தென்பதற்குப் பரிகாரம் என்றும், ஒளிருமென்பதற்குப் பாடஞ்செய்யும் என்றும் அறம் என்பதற்கு தர்மம் என்றும் பூண்டென்பதற்குப் பரித்தென்றும், ஓம்புதல் என்பதற்குப் பரிகரித்தல் என்றும் கூறும் இடங்களையும் இவற்றைப் போன்ற பிறவற்றையும் காண்க.” – _என்று எழுதியுள்ளார்.

புறநானூற்று உரையாசிரியர் கொண்டதாக இவர் குறிப்பிடும் அதே கொள்கையை இவரும் பின்பற்றியதற்குக் கரணியம் புறநானூற்று உரையாசிரியரையும் ஓர் ஆரியப் பார்ப்பனராகக் காட்டுதல் வேண்டும் என்பதோ, அவ்வாறு எழுதுவதுதான் சிறப்பு என்பதை உணர்த்தல் வேண்டும் என்பதோவாகத்தான் இருக்க வேண்டும். மேலும் பண்டைப் புலவர்களிலோ, முற்றூட்டுப் பெற்ற சிற்றரசர்களிலோ ஆரியர்கள் இருப்பாராயின் அவர்களை மிகவும் சிறந்தவர்களாகக் குறிப்பது இவரின் இனப்பற்றையும், ஓரம் போகிய தன்மையையும் நன்கு காட்டுகின்றது.

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்னும் சிற்றரசனை இவன் “அந்தணத்திலகன்” என்றும் ‘கவுண்டின்னிய கோத்திரத்திற் பிறந்தான்’ என்றும் தேவையற்ற குறிப்புகளை எழுதி வைத்துள்ளார். பாடிய புலவர்கள் குறித்த ஏதேனும் ஒரு சிறு குறிப்பைக் கொண்டே சிலரை இவர் இனத்தவராகக் கொண்டு மகிழும் சிற்றின்ப உணர்ச்சியும் இவருக்கு இருந்திருக்கின்றது. கழகப் புலவர் எருக்காட்டூர்த் தாயங் கண்ணனாரை’ இவர் அந்தணரின் வேள்வித் தீயைப் பாராட்டிக் கூறியிருத்தலால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் சுள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவரை ‘ஆத்திரையன்_ அத்திரி குலத்தில் பிறந்தவர்; இவரது பெயர் குடிப்பெயர்; இதனால் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரை ‘இவர் குலம் ஒருவகை வேதியர் குலமென்பது சிலர் கொள்கை’ என்றும் வேம்பாற்றூர்க்குமரனார் என்னும் புலவரைக் குறிப்பிடுங்கால், ‘வேம்பாற்றூர் என்பது மதுரைக்கு கிழக்கே உள்ள ஓர் ஊர்; வேம்பத்தூரென இக்காலத்து வழங்கும்; குலசேகரச் சதுர்வேதி மங்கலமென்றும் இதனுக்கு ஒரு பெயருண்டென்று சிலாசானத்தால் தெரிகிறது”என்னும் குறிப்பெழுதி, ‘கடைச் சங்க புலவர் காலந்தொடங்கி இன்றுவரை அந்தணர்களே தமிழ்ப் புலவர்களாக இவ்வூரில் விளங்கியிருத்தல் கண்கூடாதலாலும், பெயராலும் இவர் அந்தணராகக் கருதப்படுகிறார்’ என்றும் இன்னும் பலவாறும் இவர் குறிப்புகளைத் தம் இனம்சார்பாக எழுதிக் கொள்வது வழக்கம்.

மேலும், மதுரை வேளாசான் என்னும் புலவர் ஒருவர் எழுதிய புறப்பாடற் குறிப்பைக் கொண்டு “ஒரு வேந்தனிடமிருந்து மற்றொரு வேந்தன்பால் அந்தணன் தூது செல்லுதற்குரியவன் என்பது இவர் பாடலால் தெரிய வருகின்றது” என்று தம் இனத்திற்கு அரசர்கள் கொடுத்ததும் கொடுக்க வேண்டியதுமான ஏற்றத்தையும் மன வேட்கையையும் இவர் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்த்தால், கழக நூற்பதிப்பு என்னும் கல் தரையில் இவர் தம் இனப் பதிவை எத்துணை ஆழமாகச் செதுக்கி வைத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படும்.

– பாவலரேறு அவர்களின் இத்தகைய ஆதாரப்பூர்வமான ஆய்வுக்கு ‘சோ’விடமிருந்து தக்க மறுப்பு உண்டா?
உ.வே.சா.வைப் பற்றி பார்ப்பனர்கள் விளம்பரப்படுத்துவது குறித்து தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ (10.3.1935 பக்கம் 3, 4) தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

“பார்ப்பனர்கள், டாக்டர் சாமிநாதய்யர் விஷயத்தில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டதன் அந்தரங்க நோக்கம் என்ன என்பதை பார்ப்பனரல்லாதார் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி வெளிப்படுத்த விரும்பியே இவ்விஷயங்களை எழுத முன் வந்தோம்.
உண்மையில் இந்தப் பார்ப்பனர்கள் தமிழ் பாஷையின் மேலும், தமிழ் அபிவிருத்தியிலும் ஆசையுடையவர்களானால் இந்த டாக்டர் அய்யர் அவர்களை இன்று பார்ப்பனர்கள் கவுரவம் பண்ணுவதற்குக் காரணமாக இருந்த, அவருடைய ஆசிரியரான காலஞ்சென்ற மகா வித்துவான். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றியோ, கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்த காலஞ்சென்ற தியாகராஜச் செட்டியார் அவர்களைப் பற்றியோ குறிப்பிடாமல் இருந்திருக்க முடியாது.

ஆனால் இவர்களைப் பற்றிப் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ளும்படி செய்யவோ இவர்கள் அய்யர் அவர்களுக்கு செய்த நன்றியை எடுத்துக்காட்டவோ எந்தப் பார்ப்பனரும், எந்தப் பார்ப்பனப் பத்திரிகையும் முன்வரவில்லை.

அன்றியும் தமிழைப் படிப்பாரும், ஆதரிப்பாரும், படிப்போர்க்கு உதவியளிப்பாரும் இல்லாதிருந்த காலத்தில் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை ஏற்படுத்தி, அதன் பயனையும் பெரும்பாலும் பார்ப்பனர்களே அடையும்படி செய்து அச்சங்கத்தின் வளர்ச்சிக்காகவே சாகும் வரையிலும் உழைத்துக் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பற்றி மனதினாலாவது இந்தப் பார்ப்பனர்கள் நினைத்ததுண்டா?

தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கணங்களையும், மற்றும் பல இலக்கியங்களையும் மிகுந்த பிரயாசையுடன் தேடி வெளியிட்ட காலஞ்சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களைப் பற்றி இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையேனும் பேசுவதுண்டா?

தற்பொழுது கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வைத்து நிர்வகித்து பெரும்பாலும் தனது வாழ்நாளை அதற்காகவே அர்ப்பணம் பண்ணிவரும் தோழர் உமாகேசுவரன் பிள்ளை அவர்களின் முயற்சிகளுக்கு இந்தப் பார்ப்பனர்கள் துணை செய்யாவிட்டாலும்கூட பாதகஞ்செய்யாமல் இருக்க வேண்டும் என்றாவது நினைக்கிறது உண்டா?

உண்மையில் பார்ப்பனர்களுக்குக் கொஞ்சமாவது தமிழ் மொழிக்கும், தமிழ் அபிவிருத்திக்குப் பாடுபட்டவர்களுக்கும், பாடுபடுகின்றவர்களுக்கும் பெருமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா என்பதை இதுவரையிலும் சொல்லி வந்ததைக்கொண்டும், மேலே நாம் எடுத்துக்காட்டியவர்களின் ஊழியத்தைச் சிறிதாவது பாராட்டுவதற்கு முயற்சியெடுக்காததைக் கொண்டும் அறிந்திருக்கலாம்!’’ என்று தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ளார்கள்.
1901இல் மதுரை தமிழ்ச்சங்கம் அமைத்த ஞானியாரடிகள் பிராமணன் என்று சாதிக்கும் அளவுக்கு ‘சோ’வின் ஆத்திரம் அறிவை மழுக்கி இருக்கிறது! ஆதாரங்களைத் தெரிந்து கொள்வதிலும், வெளியிடுவதிலும் அவருக்குள்ள பொறுப்பற்ற தன்மையைத்தான் இது வெளிப்படுத்தும்.

அந்த ஞானியாரடிகள் வேறு யாருமல்லர். தந்தை பெரியாரால் துவக்கப்பட்ட ‘குடிஅரசு’ இதழை (2.5.1925) முதன் முதலில் துவக்கி வைத்தவர் அவர்தான்.
அவர் பார்ப்பனரல்ல_ – வீர சைவ மரபினர் என்று ஆதாரத்துடன் ‘துக்ளக்’குக்கு ஞானியாரடிகள் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திரு.அ.நா.பாலகிருஷ்ணன் அவர்களால் எழுதப்பட்ட கடிதத்தை ‘துக்ளக்’ வெளியிடவில்லை (ஆதாரம்: ‘சங்கொலி’, 16.2.2001 பக்கம் 8).
‘சோ’வின் அறிவு நாணயத்திற்கு இது ஒன்று போதாதா?

“திரு” என்ற அழகிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துவதில் கூட உ.வே.சா., இரா.இராகவய்யங்கார்கள் போட்ட முட்டுக்கட்டை கொஞ்ச நஞ்சமல்ல! இதுபற்றி பேராசிரியர் முனைவர் சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலிலிருந்து “குறளீயம்” இதழில் (1.11.2000) வெளிப்படுத்தியுள்ளார். அதன் விவரம் இதோ!

‘திரு’வை எதிர்த்து தமிழறிஞர் இரா.இராகவய்யங்கார், உ.வே.சாமிநாதய்யர் முதலானோர் எழுதினர். இரா.இராகவய்யங்கார் ‘சுதேசமித்திரன்’ இதழில் ‘திரு’ என்ற சொல் ‘ஸ்ரீ’ என்பதுபோலச் செவிக்கு இன்பம் பயவாது என்றும் ‘திரு’ என்னும் அடையாளமும் உதவாது என்றும் மறுத்தெழுதினார்.
‘திரு” என்பதே தொன்று தொட்ட வழக்கு என நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும் ‘மங்கல மொழி ‘திரு’ என பண்டிதமணி கதிரேசஞ்செட்டியாரும் ‘திருவின் பெருமை என’ நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரும் எழுதினர். இத்‘திரு’ போராட்டத்தில் தேவநேயப் பாவாணரும் ஈடுபட்டுத் ‘திரு’வின் பழைமையையும் ‘ஸ்ரீ’யின் பிற்பட்ட வரலாற்றையும் ‘திரு’வின் வேர் மூலத்தையும் விளக்கித் ‘திரு’ என்னும் சொல் தென் சொல்லே என்ற கட்டுரை வரைந்தார் என்று “தனித் தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் உள்ள ஒரு சொல்லைப் பயன்படுத்துவதற்குக்கூட தொல்லை கொடுத்தவர்கள்தான் தமிழுக்குத் தொண்டு செய்தவர்களா?
உலகம் போற்றும் உயர் கருத்துகளை வாரி வழங்கிய திருவள்ளுவரைக் கூட இவாள் கொச்சைப்படுத்தாமல் விட்டது கிடையாதே!
உ.வே.சா. அய்யர் The Kural or the Maxims of Thiruvalluvar (1916) என்று ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்து இருக்கிறார். அதன் முன்னுரையில்,

…Tradition declares that he was the child of a Brahman father named Bhaghavan and a Pariah mother Adi who had been brought up by another Brahman and given in marriage to Bhaghavan. Six other children are named as the issue of this union, all of whom have debbled in poetry.

“திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனராவார். இவரது தாயார் ஆதி என்கிற பறைச்சி. ஆதியை இன்னொரு பார்ப்பனர் அழைத்து வந்து பகவனுக்கு மணம் முடித்து வைத்தார். ஆதி-_ – பகவன் கூட்டுறவால் திருவள்ளுவரன்றி ஆறு குழந்தைகள் பிறந்தனர். அக்குழந்தைகளுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்று மரபுவழிச் செய்தியாக சொல்லப்படுவதோடன்றி இதனைக் கவிதையாகவும் எழுதி வைத்துள்ளனர்” என்று எழுதியுள்ளார். ஒரு பாடலில் இக்கருத்தை கபிலனே சொல்லுவதாக அமைந்து இருக்கிறது. அதில்கூட ‘அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்’ என்று கடைசி வரி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே முன்னுரையில்,

“Thiruvalluvar does not treat of the fourth objective separately and Hindus say that he has submitted himself to the orthodox rule that none but a Brahman should be a teacher of spritual truth to mankind”.
அதாவது, “திருவள்ளுவர் நான்காவதான வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதிக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்” என்று எழுதினார்.

(க.திருநாவுக்கரசு அவர்களின் திருக்குறளும்
– திராவிடர் இயக்கமும் – ‘சங்கொலி’, 14.6.1996)

தமிழினத்தின் ஒரு தலைசிறந்த சிந்தனை-வாதியைப் பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்பதும், ஆன்மிகம் பற்றிப் பேசும் தகுதி ஒரு சூத்திரத் தமிழனுக்குக் கிடையாது; அது பார்ப்பனர்கள் சம்பந்தப்பட்டது என்பதும் பார்ப்பனத் திமிர் அல்லாமல் வேறு என்ன?

பெரிய படிப்பாளி, பன்மொழி அறிஞர் என்று பீற்றிக் கொள்ளும் ஒரு பார்ப்பனரின் தகுதியே இவ்வளவு தரைமட்டமாக இருக்கிறதே – இதற்குச் ‘சோ’வின் பதில் என்ன?

அறிவாளி என்றாலே அவன் பார்ப்பானா-கத்தான் இருக்க முடியும் – அல்லது பார்ப்பானுக்குப் பிறந்தவனாக இருக்க முடியும் என்பதைச் சகித்துக் கொள்ள முடியுமா? இத்தகைய கூட்டத்தை வெறுக்காமல் தான் இருக்க முடியுமா?

தமிழுக்காகப் பாடுபட்டதாகப் பாவனை செய்யும் இந்தப் பார்ப்பனர்களை ஒரு இடத்தில் தட்டினால், அவர்களின் உள்ளுணர்வு என்ன என்பது சட்டென்று புரிந்துவிடும். அதுதான் சமஸ்கிருதம் பற்றியது. எந்தப் பைத்தியக்காரப் பார்ப்பானைக் கேட்டாலும் தமிழை விட சமஸ்கிருதம் தான் உயர்ந்தது என்று கூறுவான்.
பார்ப்பான் வீட்டுப் பெயர்களில் தப்பித் தவறிக்கூட ஒரு தமிழ்ப் பெயரை மருந்துக்கும் காண முடியுமா?

இவ்வளவு பேசும் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டில் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழ்மொழி வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள்_ முகம் எண்கோணமாக மாறும்_ – மிளகாயைக் கடித்ததுபோல எரிந்து விழுவார்கள். அதனை எதிர்த்து நீதிமன்றம் போவார்கள்.
ஏன்? இதே ‘சோ’ தமிழ் வழிபாட்டு மொழிபற்றி என்ன எழுதினார்?

“மொழி ஆர்வமா? மத துவேஷமா?” என்று தலைப்பிட்டு தலையங்கமே தீட்டினாரே ‘துக்ளக்’கில் (18.11.1998).
“நம்மைவிட மிக மிகப் பெரியோர்கள்_ நம்மால் கனவிலும் எட்டிப் பிடிக்க முடியாத உன்னதமான நிலையில் உள்ளவர்கள் _ புருஷோத்தமர்கள் இறைவனைத் துதித்து இயற்றிய பாடல்களும், கோத்திரங்களும் பெரும் சக்தி வாய்ந்தவை என்ற நம்பிக்கை ஹிந்துக்களுக்கு உண்டு. ரிஷிகள், துறவிகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற புண்ணிய சீலர்கள் இயற்றிய துதிகளில் அடங்கியிருக்கும் வார்த்தைகளின் பொருளுக்கு மட்டுமல்ல அந்த சொற்களின் சப்தத்திற்கும்கூட சக்தி உண்டு என்பது நம்பிக்கை. ஆகையால் அப்பெரியோர்களினால் செய்யப்பட்ட துதிகளின் மொழி பெயர்ப்பு, அவற்றின் பொருளைப் புரிந்து கொள்ள உதவுமே தவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது. இதற்குக் காரணம் மொழிகளின் மேன்மையல்ல, ஒலியின் சக்தி**
என்று எழுதியவர்தான் இந்த சோ. இதில் உள்ள ‘சாமர்த்தியம்’ என்ன தெரியுமா?

தாய்மொழி, தமிழ் மொழி என்றெல்லாம் சும்மா பேத்தாதீர்கள் _ – சமஸ்கிருத மொழியில் உள்ள ஒலிக்குத்தான் சக்தி உண்டு _ அதனால்தான் அதனை வழிபாட்டு மொழியாக வைத்துக் கொண்டுள்ளோம்_ – தமிழ் மொழியின் ஒலிக்கு அந்தச் சக்தியெல்லாம் கிடையாது என்பதைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக எழுதுகிறார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று அது இந்துக்களின் நம்பிக்கையாம்.

விவாதம் கிவாதம் என்று அண்டத்தையே புரட்டுவது போலப் பேசும், எழுதும் இவர் அறிவு ரீதியாக நேர்மையாக விவாதம் புரிய முடியாத ஓர் இடத்தில் நம்பிக்கை என்னும் ஆமை ஓட்டுக்குள் ஓடிப் பதுங்கி விட்டார்.

ஒலிக்குத்தான் சக்தி என்றால், கோயிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள அந்தக் கடவுளுக்குச் சக்தி இல்லையா என்று கேட்கத் தோன்றலாம்; ஒலியின் மூலம்தான் ஒரு கடவுள் திருப்தி அடைவாரா? அவர் என்ன வெறுப்பு _விருப்பு அற்றவரா? இந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது!
அவர்தான் ஒரே வார்த்தையில் விவாதத்தை முடித்து விட்டாரே_ – “நம்பிக்கை.”

இனிமேல் சோவிடம் உரையாடல் நடத்துபவர்களும், விவாதம் செய்பவர்களும் ‘அது என் நம்பிக்கை!’ என்று கூறி அவர் வாயை அடைத்துவிடலாம். நம்பிக்கை என்று சொல்லிவிட்டால், அதற்கு மேல் தான் விவாதத்துக்கும் அறிவுக்கும் இடம் இருக்க முடியாதே! சோ எப்படிப்பட்ட விவாதப்புலி_ அறிவாளி என்பதற்கு இதுதான் அளவுகோல்!

சோவாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பார்ப்பனராக இருந்தாலும் சரி அவர்கள் பற்றெல்லாம் சமஸ்கிருதத்தின் மீதுதான்_ – தமிழ் மீது அல்ல! அதே நேரத்தில் பிழைப்புக்காக மட்டும் அவர்களுக்குத் தமிழ் வேண்டும்.

சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆறுமுகசாமி என்ற அறுபது வயது முதியவர் திருவாசகம் பாடியதற்காக, கோயில் தீட்சதர் பார்ப்பனர்கள், முதியவர் என்று கூடப் பாராமல் அடித்து உதைத்தார்களே_ – (‘கல்கி’, 4.6.2000).

அது பற்றி ஒரு வரி கண்டித்து எழுதியதுண்டா இந்த சோ?
சோவின் எழுத்துகளில் சாமர்த்தியம் இருக்கலாம்_ – ஆனால் உண்மை எதுவும் இல்லை என்பது மட்டும் உண்மை! அதன் உள்ளீடு எல்லாம் எப்படியும்

பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதே! ♦