இனத் தூய்மை காக்க அரசு பணமா?

2022 ஆகஸ்ட் 16-31 2022 மற்றவர்கள்

கருநாடக அரசு பார்ப்பனப் பெண்கள் முன்னேற்றத்துக்கு உதவ விரும்புவதாகக் கூறி ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இது ஏதோ வறுமையினாலும், பாலின வேறு பாட்டாலும் பின்தங்கியுள்ளவர்களுக்கு உதவும் திட்டமாகக் கருதினால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
மாறாக, இது அவர்களை “பிராமணர்’’ களாகவே தக்க வைப்பதற்கான திட்டமாகும். அவ்வரசு இரண்டு நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.
1. பிராமணர்களையே திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கான நிதியுதவி.
2. பிராமணர்களிலும் அர்ச்சகப் பார்ப்பனனை மணந்து கொள்ளும் பிராமணப் பெண் களுக்கான நிதியுதவி.
இது பொருளாதார சமத்துவத்தையோ, சமூகக் குறைபாடுகளையோ நீக்குவதற்கான திட்டமாக இல்லை. இது இந்திய அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிகளைப் புறந்தள்ளி மனுஸ்மிருதியைத் தூக்கிப் பிடிக்கும் செயலாகவே உள்ளது என ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ (9.1.2021) இதழ் தலையங்கத்தில் சாடியது.