வலிப்பு வந்தால் கையில் சாவி கொடுக்கலாமா?

டிசம்பர் 16-31- 2013

– டாக்டர் கனகசபை
சென்னை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைத் தலைவர்

மூளையில் உள்ள நரம்பு அணுக்களில் ஏற்படும் மின் அலை மாற்றங்களால், மூளையின் அனைத்துப் பாகங்களும் ஒரு முகமாக ஒரே நேரத்தில் இயங்குவதால் வலிப்பு நோய் வருகிறது. குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வலிப்பு நோய் வர வாய்ப்பு உள்ளது. ஒரு சில வலிப்பு நோய்கள் பரம்பரையாகவும் வருகிறது.

வலிப்பு நோய் வந்தால் உடனடியாக சாவியைக் கையில் கொடுப்பது போல சினிமாவில் காட்டுகின்றனர். அதனைப் பார்த்து பொதுமக்களும் வலிப்பு நோய் வந்தவுடன், அவர்களின் கையில் சாவியைக் கொடுக்கின்றனர்.

 

வலிப்பு நோய்க்கு சாவி கொடுப்பதன் மூலம் எவ்விதப் பயனும் இல்லை. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.

வலிப்பு வந்தவுடன், அவரை உடனடியாக இடது பக்கம் திரும்பிப் படுக்க வைக்க வேண்டும். அவர் பற்களைக் கடித்துக் கொள்ளாமல் பாதுகாக்க ரப்பர் பந்துகளை வாயில் வைக்க வேண்டும். கட்டையை வாயில் வைத்தால், பற்கள் உடைந்துவிடும்.

அதன்பின், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். டாக்டர்கள் சொல்லும் மருந்து, மாத்திரைகளை வலிப்பு நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முதலில் அடிக்கடி வரும் வலிப்பு நோய் குறையும். அதன்பின், வலிப்பு நோய் முழுவதுமாக குணமடையும்.

வலிப்பு நோயாளிகள் வாகனம் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது மற்றும் உயரமான இடங்களில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக வலிப்பு நோயாளிகள் கவலைப்படக்கூடாது. பதற்றம் அடையக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *