சமூக நீதியின் வெற்றி ! நீதிபதி சிறீபதி !

தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்ணுரிமை, சமூகநீதிக்கான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்று முன்னேறி வருகின்றார்கள். தந்தை பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்கள், ஒடுக்கு முறைகளை உடைத்து எழுச்சி பெற்று வருகின்றனர். அத்தகைய சாதனையைப் புரிந்த சாதனையாளர்களில் ஒருவர்தான் சிறீபதி. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிறீபதி எனும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த பெண், அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று […]

மேலும்....

தடகளத்தில் சாதனை புரிந்துவரும் விளையாட்டு வீராங்கனை வித்யா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2023இல் தமிழ்நாட்டின் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், தேசிய சாதனையைச் சமன் செய்துள்ளார். சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். இதுமட்டுமில்லாமல், இறுதிப்போட்டிக்கு முந்தைய அரையிறுதியில் பி.டி. உஷாவின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். கோவையைச் சேர்ந்த வித்யாராம்ராஜ், கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவரின் தந்தை ராம்ராஜ் தாணி(ஆட்டோ) ஓட்டுநர். வித்யாவிற்கு ஒரு சகோதரி உள்ளார். […]

மேலும்....

ஆட்டோ ஓட்டுநர் தோழர் பவானி!

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் பவானி, எத்துறையிலும் பெண்களால் பணிபுரிய முடியும். சாதிக்க முடியும் _ என முன்னுதாரணமாகத் திகழ்பவர் 50 வயதான இவர் எவர் சார்பும் இன்றி, தன் கடின உழைப்பால் வாழ்ந்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ஊரைச் சேர்ந்தவர் பவானி. இவரின் கணவர் 2010இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது இவருக்கு 37 வயது. கணவரின மரணத்தால் இவரின் வாழ்க்கையே மாறிப்போனது. கட்டட வேலை, மருத்துவமனையில் ஆயா வேலை எனப் […]

மேலும்....

பெண்ணால் முடியும் – விண்வெளியில் பறக்க பயிற்சிபெறும்

உதயகீர்த்திகா குழந்தைப் பருவ வளர்ச்சி நிலைகளில், குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார் அன்னை. நிலவின்மீது ஓர் ஈர்ப்பு அனைவருக்குமே உருவாவது இயற்கைதான். சகபள்ளி மாணவர்கள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் ராக்கெட், ஏரோபிளேன்ல பறக்கணும்னு தனது சிந்தனைச்சிறகை விரித்து எதிர்காலத்தில் சாத்தியமாக்கியுள்ளார், சாமானிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சாதனைப் பெண் உதயகீர்த்திகா. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெண்ணுரிமைச் சிந்தனை, பெண் ஆண் சமம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் எனும் சிந்தனையை […]

மேலும்....

108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தோழர் வீரலட்சுமி. இவர் சில மலைக் கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் ஓட்டுநராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் (எமர்ஜென்சி பைலட்) முதல் பெண் பைலட் தோழர் வீரலட்சுமி ஆவார். தோழர் வீரலட்சுமி திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். இவரின் கணவரும் கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சுயமாகச் […]

மேலும்....