கவிதை : வெல்க திராவிடம்!

முனைவர் கடவூர் மணிமாறன்   இரட்டை ஆட்சி மாநிலங்கள் எங்கும் இயக்கிடத் துடிக்கின்றார்! புரட்டால் வஞ்சக வலைவிரிப்பார்! புளுகை மெய்யெனப் புகன்றிடுவார்! அரசியல் சட்டம் சீரழித்தே ஆளுநர் மூலம் ஆட்டத்தைப் பரபரப் பாக நடத்துகிறார்! பாதையில் முள்ளைப் போடுகிறார்! பெரியார் சிந்தனை நாடெங்கும் பெருமை சேர்த்திடக் காண்கின்றோம்! புரியா மடமைக் கூட்டத்தார் புழுதிச் சேற்றுள் புரள்கின்றார்! சமத்துவ தருமம் விரும்பாமல் சனாதன தருமம் அரங்கேற நமக்குள் கலகம் மூட்டுகிறார்; நான்கு வருணம் திணிக்கின்றார்! உரிமை யாவும் பறிக்கின்றார் […]

மேலும்....