அய்யாவின் அடிச்சுவட்டில்

(இயக்க வரலாறான தன்வரலாறு – 200) அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு     20ஆம் நூற்றாண்டில் இன அழிப்பு, நூல் அழிப்பு வரலாற்றில் மிகப்பெரும் வன்முறையாக, நிகழ்வாக கருதப்படுவது யாழ் நூலக எரிப்பு வன்செயலாகும். இந்நூலகம் கரு.கே.எம்.செல்லப்பா என்பவரால் 11.11.1933இல் அவரது வீட்டில் உருவாக்கப்பட்டது. அவர் தமது வீட்டில் இருந்த சில புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. பின்னர் 1936ஆம் ஆண்டு யாழ் நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய […]

மேலும்....

பறை-6

  – முனைவர் மு.வளர்மதி   விசித்துக் கட்டும் வார் பறைக்குப் போர்த்தப்படும் தோல், தோலால் செய்யப்பட்ட வார்களால் இறுக வலித்துக் கட்டப்படுகிறது. இறந்த கன்றுப் பருவப் பசுவின் பக்கத்தோலை வாராகக் கொண்டனர். திண்ணிய வாரால் இறுக வலித்துக் கட்டும்பொழுது தோற்கருவிகளின் அடிக்கும் இடமாகிய கண்களிலே தேவையான சுருதி அமைக்கப்பட்டது. துடி என்னும் தோற் கருவியின் வார் செறிந்தும் நெகிழ்ந்தும் அமைந்திருக்கும். வார்கள் துண்டுகளாகப் பகுக்கப்பட்டு, அத்தகைய துண்டான வார்களால் வலித்துக்கட்டினர். வார் அறுப்புண்டு சீர்குலைந்து கிடந்த […]

மேலும்....

திருக்குறள் ஆரிய நூல்களுக்கு எதிரானது!

சரியாகப் பத்து மணிக்குப் பெரியார் அவர்கள் கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியார் என்றும், பதவி விருப்பமற்றவர் என்றும், ஆராய்ச்சி வல்லுநர் என்றும் அவர்களை அறிமுகப்படுத்தி அன்னாரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் தொடர்ந்து பின் மொழிய திரு. ராவ்பகதூர் ஏ.சக்ரவர்த்தி நயினார் அவர்கள் நீண்ட கைத்தட்டலுக்கிடையே தலைமையேற்று தம் சொற்பொழிவைத் தொடங்கினார். தான் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருப் பதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பிறகே தம் சொற்பொழிவைத் தொடங்கினார். அவர் […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? -(18)

– சிகரம்  துதியும், பதிகமும் பாடி நோய்களை நீக்க முடியுமா? திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டின் மேற்பகுதியிலுள்ள பல தலங்களையும் வணங்கிக் கொண்டு காவிரியின் தென்கரையில் கொங்கு நாட்டிலே மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்னும் பதியை வந்தடைந்தார். அச்சமயம் திருஞானசம்பந்தருடன் வந்திருக்கும் பரிசனங்கள் பல நாளும் அந்நாட்டில் தங்கியிருந்ததனால் நடுங்குதற்கு ஏதுவான குளிர் முன்னேகண்டு பின்னே சுரநோய் வந்து அவர்களை அடர்வது போல் தொடர்ந்தது. அதனை அவர்கள், திருஞானசம்பந்தரிடம் தெரிவித்து வணங்கினர். அவர், இச்சுரநோய் […]

மேலும்....