மூளைச் சலவை

2023 அக்டோபர் 16-31, 2023 கட்டுரைகள்

யூதர்கள் இரகசிய அறிக்கை

நம்மைத் தவிர, உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றுமை சக்திகள் எதுவும் இருக்கக்கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே அவை காயடிக்கப்பட வேண்டும். பல்வேறு சக்திகள் ஒன்றுபடுவதற்கு ஆரம்பக் களமாக விளங்குவது பல்கலைக்கழகங்கள். எனவே, அத்தகைய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளையும் கல்வித் திட்டங்களையும் நமது திட்டங்களுக்கு ஏதுவான திசையில் மாற்றியமைக்க வேண்டும். பல்கலைக்கழகத் தலைவர்களும் பேராசிரியர்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நமது இரகசியத் திட்டம் தீர்மானிக்கும். ஒரு சிறிதும் அதிலிருந்து அவர்கள் வழுவிச் செல்ல முடியாது. நாம் வகுத்துக் கொடுத்த திட்டத்திற்கு மாற்றமான திசையில் சென்றால், நமக்கு எதிராக அவர்கள் எந்தப் பாதுகாப்பும் பெற மாட்டார்கள். மிகவும் முன்னெச்சரிக்கையோடுதான் பேராசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். முழுக்க முழுக்க அரசாங்கத்தையே அவர்கள் சார்ந்திருப்பார்கள்.

சிவில் சட்டங்கள் தொடர்பான பாடங்கள்,சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பானவை பாடத்திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும். அவர்களில் அதீத திறமைசாலிகளாக உள்ள வெகு சிலருக்கே அந்தப் பாடங்கள் போதிக்கப்படும். அரசியல் சாசனக் கொள்கை தொடர்பான கேள்விகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒருவனை அந்தப் பல்கலைக்கழகம் உற்பத்தி செய்து அனுப்பக்கூடாது. ஏனெனில், அவர்களின் பாட்டன்மார்களுக்கும் அதைப் புரிந்து கொள்ளும் திறன் கிடையாது.

பல்வேறு மனிதர்களுக்குச் சரியான அரசியல் அறிவு கிட்டுவதில்லை. அவர்களே கற்பனாவாத அரசியல் சித்தாந்தங்களில் உழன்று, அதைப் பிரச்சாரம் செய்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களே மோசமான குடிமக்களையும் உருவாக்குகிறார்கள். அவர்களின் கல்வித் திட்டம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை நீங்கள் கவனித்தாலே இந்த உண்மையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவர்களுடைய சமூகக் கட்டமைப்பைப் பாழ்படுத்தக்கூடிய இந்த அனைத்து வகையான நாசகாரக் கொள்கைகளையும் அவர்களின் பாடத்திட்டங்களில் நாம் புகுத்தியுள்ளோம். ஆனால், ஆட்சி அதிகாரத்தை நாம் பிடிக்கும் சமயம். இந்தத் தொல்லை நிறைந்த பாடங்கள் யாவும் கல்வித் திட்டங்களில் இருந்து அகற்றப்படும். இளைஞர்களை அதிகாரத் தலைமைக்குக் கட்டுப்பட்ட நல்ல பிள்ளைகளாக உருவாக்குவோம். ஆட்சியாளரே ஆதரவளிப்பவர்; அவரே அமைதிக்கும், பூரணத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர் என்பதை உணர்ந்து இளைஞர்கள் அவரை நேசிப்பார்கள்.

வரலாற்றைத் திருத்தி எழுதுவோம்

செவ்வியல் இலக்கியங்களும் பழங்கால புராணக் கதைகளும் நல்லவற்றைவிட தீய உதாரணங்களையே அதிகம் கொண்டிருப்பதால், அவற்றைப் படிப்பதைவிட, எதிர்காலத் திட்டங்களில் மக்களைக் கவனம் செலுத்த வைப்போம். நமக்கு வேண்டத்தகாத கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களையும் நிகழ்வுகளையும் மனித குலத்தின் நினைவிலிருந்து அகற்றிவிட வேண்டும். விதிவிலக்காக, கோயிம் ஆட்சியாளர்களுடைய தவறுகளை மட்டும் விட்டுவைப்போம். நடைமுறைக்குச் சாத்தியமான வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதே அந்தந்த சமூகப் பிரிவுகளின் கடமைகள். மக்களில் ஒருவர் மற்றொருவரோடு எப்படி உறவுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லித் தருவோம். மேலும் சுயநலமான, தீய வாழ்க்கை உதாரணங்களைத் தவிர்க்க வேண்டும். அவை தீமை என்னும் நோயைப் பரப்பும் காரணிகள். மேலே சொன்ன விதிகளின் அடிப்படையில் அவர்களுக்குக் கல்வியூட்டுவதற்குத் தேவையான திட்டங்களை முதன்மைப்படுத்துவோம். கல்வித் திட்டங்கள் சமூகத்தில் மக்களிடையே உள்ள வர்க்கங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஏற்றாற்போல் வகுக்கப்படும். இதுபோன்ற அணுகுமுறைக்கு முக்கியத்துவம் தரப்படும். ஏனெனில் பொத்தாம் பொதுவான, எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி முறை என்பது புத்திசாலித்தனமான ஒன்றல்ல.

சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அவரவர்கள் செய்ய வேண்டிய வேலை,கடமைகளைப் பொறுத்தே பயிற்சியளிக்கப்படுவார்கள். அரிதிலும் அரிதான அறிவாளி, சமூகத்தின் தாழ்ந்த பிரிவில் பிறந்திருந்தாலும், மேல்பிரிவை நோக்கி எளிதாக முன்னேறி விடுவான். ஆனால், அதை நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில், அந்தப் பதவிக்காகவே உயர்குடியில் பிறந்துள்ள ஒருவனுடைய பதவியைத்தான் கீழிருந்து மேல்வந்தவன் ஆக்கிரமித்துக் கொள்கிறான் என்று பொருள். மேலும், அவன் பிறவி திறமைசாலியாகவும் அந்தத் துறையில் அனுபவம் உடையவனாகவும் இருப்பதில்லை. இதுபோன்ற சமூக வர்க்கக் கலப்புகளை அனுமதிக்கும் கோயிம்களின் மிக மிக முட்டாள்தனமான நடவடிக்கை, எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்.

மக்கள் மனதில் ஆட்சியாளர் நீங்காத இடத்தைப் பிடிக்க வேண்டுமென்றால், அவருடைய நடவடிக்கையின் நோக்கம் என்ன,
மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அதைப் பள்ளிக்கூடங்களிலும் பொது இடங்களிலும் போதிக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயம்.கல்வி போதிக்கும் சுதந்திரத்தை ஒழித்துக் கட்டுவோம். நமது கல்வி நிறுவனங்களில் அனைத்து வயது மாணவர்களும் தங்கள் பெற்றோர்களுடன் ஒன்றுகூடுவதற்கு முழு உரிமை தரப்படும். விடுமுறை நாள்களில் நடைபெறும் இந்தச் சந்திப்புகளின் போது, ஆசிரியர்கள் உரையாற்றுவார்கள். அதற்காக அவர்கள் கட்டணம் பெறமாட்டார்கள். அந்த ஆசிரியர்கள், நம்மால் தயாரித்து அனுப்பி வைக்கப்படும் கல்வி உரைகளைப் போதிப்பார்கள். அந்தப் பிரசங்கத்தில், சமுதாயத்தில் மனிதர்களுக்கிடையான உறவுகள் பற்றிய சந்தேகங்களுக்கும், சட்டங்களைப் பற்றியும், சமுதாயத்தில் தங்களுக்குள்ள கடமை பற்றிய புரிதலின்மை குறித்தும் அவர்களுக்கு விளக்கப்படும். இன்னும் புதிய கொள்கை சித்தாந்தங்களைப் பற்றியும் அவர்களுக்குப் போதிக்கப்படும். அந்தச் சித்தாந்தங்கள் படிப்படியாக மத நம்பிக்கைகளாக மாற்றப்படும் அது என்ன என்பதை இன்னும் நாம் வெளிப்படுத்தவில்லை. நம்முடைய நிகழ்கால, எதிர்காலத் திட்டங்களைப் பற்றி முழுமையாக ஆலோசித்து முடித்த பின், இறுதி அத்தியாயத்தில் அந்தப் புதிய சித்தாந்தங்கள் என்ன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

மனிதர்கள் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையிலேயே வாழ்க்கையை வழி நடத்திச் செல்கிறார்கள் என்பதை நம்முடைய பல நூற்றாண்டு கால அனுபவத்தில் பார்க்கிறோம். அந்தக் கருத்துகளை அவர்கள் கற்கும் கல்வி மூலமே கிரகித்துக் கொள்கிறார்கள். கல்வி கற்பதற்கு ஏராளமான வழிமுறைகள் உள்ளன. கல்விப் பணிகள் எல்லா மனிதர்களுக்கும் நல்ல வளர்ச்சியின் பலனை அளித்துள்ளன. நிச்சயமாக, தற்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் கல்வி பயிற்றுவிக்கும் சாதனங்களைக் கைப்பற்றுவதுதான். அதன் மூலம், மக்களிடம் சுயசிந்தனைத் திறன் என்பதே இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த சில காலங்களாக, நம்முடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

கோயிம்களின் சிந்தனையை நாம் நிறுவியுள்ள புலன்சார் கல்வித் திட்டத்தின் மூலம் ஏற்கனவே மட்டுப்படுத்தி விட்டோம். இதனால் அவர்களால் எதையுமே சுயமாகச் சிந்திக்க முடியாமல் போய்விட்டது. நல்ல சாதுவான வீட்டு விலங்குகளைப் போல் எந்த ஒரு காரியத்தைக் கற்க வேண்டுமென்றாலும், அதை நேரில் செயல்படுத்திக் காட்டினால்தான் கற்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். எதையும் கண்களால் பார்த்தால்தான் அதை நம்புவோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு அதற்காகவே காத்திருக்கிறார்கள். பிரான்சில் நம்முடைய நல்ல ஏஜென்டான புர்கைஸ், இந்தப் புலன்சார் கல்வி முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார்.

(தொடரும்)