எச்சரிக்கை தொடர்! – சர்வாதிகாரமே சரியானது! (யூதர்கள் இரகசிய அறிக்கை)

2023 கட்டுரைகள் ஜூன் 16-30,2023

“தற்காலிகமான தீய செயல்கள் மூலம், ஒரு வலுவான நல்லாட்சியை அமைக்கும் பணியில் நம்மை நாம் ஈடுபடுத்தக்கொண்டுள்ளோம். இந்த லிபரலிசக் கொள்கையால் பாழ்பட்டிருக்கிற உலக மக்களின் வாழ்க்கையை நம்முடைய ஆட்சி மீட்டுக் கொண்டு வரும். முடிவைப் பொறுத்தே செயல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. எனவே எது தேவையானதோ, பயன்தரக்கூடியதோ அதைவிட்டு விட்டு, நமது செயல்திட்டங்கள் சரியானவையா, அவை அறநெறிக்கு உட்பட்டவையா என்பன போன்ற வீண் கேள்விகளில் நம் கவனத்தை திசை திருப்பக் கூடாது.
நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிற இத்திட்டம் இப்போது போடப்பட்டதல்ல. காலங்காலமாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. எனவே, அதிலிருந்து நாம் தடம் மாறிச் செல்ல முடியாது. அப்படிச் செய்தால், பலநூறு ஆண்டுகளாக நம் முன்னோர்கள் செய்து வந்த உழைப்புகள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும்.
குழந்தையிலிருந்தே ஒருவனை சர்வாதிகார அரசியலுக்காகப் பயிற்றுவிக்கும்போதுதான், அவன் கைதேர்ந்த ஆட்சியாளனாக வர முடியும். அவனால் மட்டுமே அரசியல் அரிச்சுவடியின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

எல்லோருக்கும் உரிமை என்று கொடுத்துவிட்டால், தெருவுக்குத் தெரு தலைவன் உருவாகி எந்தத் திட்டமும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.சர்வாதிகாரம்எனவே சர்வாதிகாரமே சரியானது.

ஒரு திட்டத்தைத் தீட்டி, தெளிவாகவும் விலாவாரியாகவும் விவரித்து, அதைச் செயல்படுத்துமாறு அரசின் பல்வேறு துறைகளுக்கும் கட்டளையிடக்கூடிய சாத்தியம் ஒரு சர்வாதிகாரிக்கே உள்ளது. இதிலிருந்து நாம் என்ன தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதென்றால், நாட்டில் நல்ல அரசமைப்பு என்பது பொறுப்பு வாய்ந்த ஒருவரின் கையில் அதிகாரம் குவிந்திருக்கும் சர்வாதிகார ஆட்சி முறைதான். அந்த ஆட்சி முறையில்தான் எந்த ஒரு நாகரிகமும் தழைத்திருக்கும். ஒரு நாகரிகத்தைப் பாதுகாத்து, அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது அந்த நாட்டின் தலைவரே தவிர, மக்கள் அல்ல. இந்த மக்கள் இருக்கிறார்களே இவர்கள் காட்டுமிராண்டி இயல்புடையவர்கள். வாயப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டுவார்கள். எப்பொழுதெல்லாம் ஜனக்கும்பல், சுதந்திரத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் கட்டுப்பாடின்றி அது தன்னிச்சையாக ஆட ஆரம்பித்துவிடுகிறது. உச்சகட்டமாக, எந்தச் சட்டங்களும் கட்டுப்படாத வன்முறை கும்பல்களாக உருமாற்றமும் அடைகின்றது.

வன்முறை, நயவஞ்சகம் இவைதான் நமது அடையாளம். அரசியல் விவகாரங்களைப் பொறுத்தவரை வன்முறையே வெற்றி தரும். குறிப்பாக, நமக்கு ஒத்துவராத திறமையான அரசாங்க அதிகாரிகள் என்றால், இந்த வழிமுறையைக் கையாண்டால்தான் நமது வழிக்கு அவர்கள் வருவார்கள். நமது கொள்கையாக வன்முறைதான் இருக்க வேண்டும். நமது ஏஜென்டுகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க மறுத்து நமக்கு அடிபணியாத அரசாங்கங்களிடம் தந்திரமாகவும், நயவஞ்சகமாகவும் நடந்துகொள்வதே சரியான வழியாகும். இந்தத் தீய மார்க்கம்தான் சரியான முடிவை அடைவதற்கான ஒரே வழி. எனவே, நம் திட்ட நோக்கம் நிறைவேற உதவியாக இருக்கும்வரை லஞ்சம் கொடுப்பதையோ, பொய்கள் கூறுவதையோ, துரோகங்களை செய்வதையோ நிறுத்தக்கூடாது. அரசியலைப் பொறுத்தவரை ஒரு சொத்தை அபகரிப்பதன் மூலம்தான் நம்முடைய எதிரிகள் நமக்கு அடிபணிவர். தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றாலோ எந்த உறுத்தலும் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும்.

நயவஞ்சகம், வன்முறை என்ற இந்த கொள்கையில் நிலைத்து நின்று செயலாற்றுவது அவசியம். இவ்வாறு செய்வது, நமது சொந்த ஆதாயத்திற்காக அல்ல. நமது திட்டம் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும். ஆகவே கடமையின் பெயராலும் இவற்றைச் செய்தாக வேண்டும். நமது செயல் திட்டங்களை நிறைவேற்றுகிற வழிமுறைகளைப் போலவே, நம்முடைய கொள்கைகளும் வீரியமிக்கவை. நாம் செயல்படுத்தும் வழிமுறைதான் நம் வெற்றிக்கு முதன்மைக் காரணம் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. அதற்குப் பின்னால் உள்ள கொள்கைத் தீவிரமும் அந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

பண்டைய காலத்தில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற வார்த்தைகளை மக்கள் கூட்டங்களுக்கு நடுவே முதன்முதலில் முழங்கியவர்கள் நாம்தான். இன்றோ இந்த வார்த்தைகள் ஓட்டுப் பொறுக்கும் முட்டாள் அரசியல்வாதிகளால் மறுபடி மறுபடியும் உச்சரிக்கப்பட்டு வருகின்றன. நாம் அன்று சொன்னதை திரும்பி திரும்பிச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் கிளிப்பிள்ளைகள், பொறி வைக்கப்பட்டுள்ள நம் கூண்டை நோக்கி, எல்லா திசைகளிலிருந்து, மக்களின் சுபிட்ச வாழ்க்கையையும் நம்முடன் சேர்த்தே தூக்கிக் கொண்டு வருகின்றன. இந்த வன்முறை கும்பல்களுக்கு எதிராக முன்னர் தனிமனிதச் சுதந்திரமும், பொது அமைதியும் பாதுகாக்கப்பட்டிருந்தன. இன்றோ அவை மட்டற்ற சுதந்திரவாதத்தின் பெயரால் சீர்குலைக்கப்படுகின்றன. ‘சுதந்திரம்’ என்பது வரையறுக்கப்படாத, விரிவான அர்த்தத்தை உள்ளடக்கிய அருவ வார்த்தையாகும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு கோயிம் சமுதாயத்தின் பகுத்தறிவுவாதிகள் என்று அறியப்படும் போலி அறிவுஜீவிகளால் ஒன்றையும் சாதிக்க முடியாது. அவர்கள் இயற்கை அமைப்பை உற்று நோக்கவில்லையா? சிந்தனை, செயல், திறமை என எல்லாவற்றிலும் மனிதர்கள் ஒருவொருக்கொருவர் வித்தியாசப்பட்டவர்களாகவும் ஏற்றத்தாழ்வு உடையவர்களாகவும் இருக்கும்படிதான் இயற்கை அமைப்பே நிறுவப்பட்டிருக்கிறது. அதில் சமத்துவம் கிடையாது.
இந்த இயற்கை நியதிகளோடு யார் அனுசரித்துப் போகிறார்களோ, மக்கள் கூட்டத்தைப் போலவே அதன் ஆட்சியாளர் குருடாக இருந்தாலும் அவரால் ஆட்சி நடத்த முடியும். யார் இதை அனுசரிக்கவில்லையோ, அவன் எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும், அரசியலைப் பற்றி ஒன்றுமே அறியாதவன் என்று பொருள். இவற்றைக் குறித்தெல்லாம் கோயிம்களுக்கு அக்கறையே கிடையாது. காலங்காலமாக நடைபெற்ற மன்னராட்சி முறை, மேற்சொன்ன ஏற்றத்தாழ்வுகளையும், இயற்கை நியதிகளையும் அனுசரித்துதான் நடைபெற்றது. இந்த அரசியல் ஞானம் தந்தைவிடமிருந்து மகனுக்குச் சொல்லித்தரப்பட்டு, அவ்வாறே வழிவழியாக அரச வம்சத்தினருக்கு மட்டும் கற்றுத்தரப்பட்டன. ஆனால், அவர்கள் யாரும் அதைப் பொதுமக்களிடம் வெளிப்படுத்த முடியாது. காலப்போக்கில், இந்த உண்மையான அரசியல் ஞானம் மறைந்துவிட்டது.

பாரம்பரியமாக மேட்டுக்குடி வர்க்கம் இருந்த இடத்தில், இன்று நமது கல்வியைப் படித்தவர்கள் அதிகாரிகளாக அமர வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மேலே செல்வந்தர்கள் இருக்கும் வகையிலான ஓர் அமைப்பை நிறுவியுள்ளோம். நமது இயக்கத்தில் கற்றறிந்த பெரியார்களின் வழிகாட்டுதலின் பேரால், அந்தச் செல்வந்தர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

நமக்கு வேண்டியவர்களை எவ்வாறு அணுகுகிறோம் என்பதில்தான் நமது வெற்றியின் சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

– தொடரும்