பெண்ணால் முடியும்!

மார்ச் 16-31,2022

மன உறுதியால் லட்சியத்தை வென்ற தாய்!

சிறந்த உடல் கட்டமைப்புக்கான (Body Building) தென்னிந்திய அளவிலான போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் சங்கீதா வயது 35. இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா மட்டுமல்ல, அப்பாவும் இவர்தான். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்-பாடியை அடுத்த மேட்டுப் பாளையத்தில் வசித்து வருகிறார்.

தன்னைப் பற்றிக் கூறுகையில், “பத்தாவது முடிச்ச உடனே கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டேன். குடும்ப நிலைமை அப்படி. எனக்கு 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அவரு பேரு பாண்டியன். அவரு வந்த பிறகாவது என் வாழ்கையில் நல்லது நடக்கும்னு நினைச்சேன். ஆனா, ரெண்டு பிள்ளைங்க பிறந்த பிறகு கருத்து வேறுபாடு காரணமா எங்களுக்கு விவாகரத்து ஆயிடுச்சு. அப்புறம் அவருக்கு மூளைக்காய்ச்சல் வந்து கோமாவுக்கு போய், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு. நான்தான் ஒற்றை மனுஷியா என் பிள்ளைகளை வளர்க்குறேன்.

மூத்தவன் தினேஷ்குமார், ப்ளஸ் டூ படிக்கிறான். பொண்ணு நந்தினி பத்தாவது படிக்குது. எனக்கு சின்ன வயசுல இருந்தே பல தரப்பட்ட வேலைகளும் செஞ்சு பழகிடுச்சு. இப்பக்கூட தினமும் என்ன வேலை கிடைக்குதோ அதை செஞ்சிக்கிட்டு இருக்கேன். தோல் ஃபேக்டரிக்கு போவேன், மேஸ்திரி வேலைக்குப் போவேன், வீட்டு வேலைக்குப் போவேன், பாத்ரூம் கழுவுவேன். எனக்கு அன்னன்னைக்கு கூலி கிடைச்சா போதும். ஆனா, மனசுல இன்னொரு பக்கம், என் வீட்டுக்காரரைப் பிரிஞ்சதுலேயிருந்து, ஏதாச்சும் சாதிக்கணும்னு ஒரு நெனப்பு _ வெறி ஓடிட்டே இருக்கும். நான் வாழ்க்கை முழுக்க செஞ்சு வந்த கரடுமுரடான வேலைகளால, எனக்கு தசையெல்லாம் கின்னுனு இருக்கும். அதனால, நாம ஏன் பாடிபில்டிங்ல சாதிக்கக் கூடாதுனு தோணுச்சு…

வாணியம்பாடி வாரச் சந்தைகிட்ட இருக்குற ஜிம்ல சேர்ந்தேன். பொம்பளைகளுக்கு சாதாரண ஆசை வந்தாலே அது நிராசையாவே போயிடும். அப்படியிருக்கும்போது, பெரும்-பாலும் ஆண்களே இருக்குற பாடிபில்டிங் துறையில சாதிக்கணும்னு நினைப்பு வந்தா என்னென்ன எதிர்வினைகளை எல்லாம் சந்திக்கணுமோ அதையெல்லாம் சந்திச்சேன்.

ஆனா, என் லட்சியத்துக்காக நான் நேர்மையா ஓடுனா என்னை விமர்சனம் பண்ண மட்டுமே ஊரே வருதேன்னு நினைக்கும்-போது, அழுகையா வரும்.

“ஊருப்பேச்சு ஒரு பக்கம்னா, என் வறுமை இன்னொரு பக்கம். ஒரு கட்டத்துல என்னால ஜிம்முக்கு ஃபீஸ் கட்ட முடியாம, அங்க போறதை நிறுத்திட்டேன். அப்புறம் ஜிம் ட்ரெயினர் குமாரவேல் என்னைக் கூப்பிட்டு, ‘பீஸ் எல்லாம் வேண்டாம், என்னால முடிஞ்சு உதவியை உங்களுக்குச் செய்றேன், பயிற்சியைத் தொடருங்க’னு சொன்னார். சார் அப்படி சொல்ற அளவுக்கு அப்போ நமக்குத் திறமையும் தகுதியும் இருக்குதுன்னு என் தன்னம்பிக்கை அதிகமாச்சு. என் வறுமை, வாழ்க்கை மேல இருந்த கோவம், சாதிக்குற வெறி எல்லாத்-தையும் ‘வொர்க் அவுட்ல’ வெளிப்படுத்தினேன்.

“மாவட்ட, மாநில அளவுல நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டேன். வெற்றிகள் கிடைச்சாலும் சரியான அடையாளம், அங்கீகாரம் கிடைக்கல. அப்போதான்,  தென்காசியில தென்னிந்திய அளவுல பெண்-களுக்கான பாடிபில்டர் போட்டி நடக்குதுனு கேள்விப்பட்டு வெறித்தனமா பிராக்டீஸ் பண்ணினேன். அதுல கேரளா, பெங்களூரு, ஆந்திரானு பல மாநிலங்கள்ல இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கிட்டாங்க. எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சார்பா ‘சவுத் இந்தியா சாம்பியன்’ (ஷிஷீutலீ மிஸீபீவீணீ சிலீணீனீஜீவீஷீஸீ) பட்டத்தை ஜெயிச்சப்போ, அனைவரும் பாராட்டினாங்க.

அடுத்து ஆசிய அளவுப் போட்டி வருது. அதுல இந்தியா சார்பா நான் பங்கேற்று நம் நாட்டுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கணும்.  உடல் வலிமையும் மனவலிமையும் நிறைய இருக்கு’’ என்கிறார்.

அவரின் நிலையை அறிந்த தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்து அவரையும் ஊக்கப்படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *