ஆசிரியர் பதில்கள் : மவுன ஆதரவு மாபெரும் குற்றம்!

அக்டோபர் 16-31,2021

கே1:     “இந்துத் தமிழர்’’ என்கிற அளவுக்கு தமிழ்த் தேசியம் சென்று-கொண்டிருக்-கிறதே! தங்கள் கருத்து என்ன?

               – அ.பரமசிவம், வேலூர்

ப1:        ‘முழுக்க நனைந்த பின் முக்காடு ஏதுக்கடி?’ என்ற பழைய கிராமியப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது _ மகா வெட்கம்!

கே2:     உத்தரப்பிரதேச பாசிச வெறியாட்டத்-திற்குப் பிறகாவது இந்திய அளவில் விவசாயிகள், மானுடப் பற்றாளர்கள் ஒன்றுதிரண்டு போராடி உடனடித் தீர்வு காண முன்னெடுப்பு கட்டாயமல்லவா? அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடிட வேண்டாமா?

               – க.முருகேஸ்வரி, வியாசர்பாடி

ப2:        தன்முனைப்பைத் தியாகம் செய்து, பொது எதிரி யார் என்பதைச் சரிவரப் புரிந்து லட்சிய உணர்வோடு செயல்-பட்டால் மட்டுமே அது முடியும்!

கே3:     வரதட்சணை வாங்கினால், வழங்கப்-பட்ட பட்டம் ரத்து செய்யப்-படும் என்ற கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு சிறந்த வழிகாட்டல்தானே?

               – தே.பெரியகருப்பன், மதுரை

ப3:        அதோடு அபராதம், சிறைத் தண்டனையும் சேர்த்து வழங்கினால் நல்லது!

கே4:     உத்தரப்பிரதேச கொடுந்தாக்குதலுக்குப் பின்னும் வாய்திறவா மோடி பச்சை பாசிஸ்ட் தானே?

               – மகிழ், சென்னை

ப4:        குற்றமிழைத்தவரைவிட, மவுனத் தவத்தால் அதற்கு ஆதரவு தருவோர் எவரும் மிகப் பெரிய குற்ற உடந்தையாளர் என்பது கிரிமினல் சட்டம் ஆகும்!

கே5:     ஊராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்துவது கூடாது என்ற கருத்து சரியா?

               – கோ.கன்னியப்பன், பொற்பந்தல்

ப5:        எல்லோரும் கூடி ஒருமித்த முடிவுக்கு வந்தால் ஒழிய, இது சிறப்பாகச் செயல்பட முடியாது!

கே6:     2024இல் சட்டமன்றத் தேர்தலை எதிர்பார்க்கும் எடப்பாடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

               – தா.மீனாட்சிசுந்தரம், புதுக்கோட்டை

ப6:        ‘நினைப்பு பிழைப்பைக் கெடுத்தது’ என்ற பழமொழியே நினைவுக்கு வருகிறது!

கே7:     தலைவர்களின் சிலைகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புப் பற்றி தங்கள் கருத்து என்ன?

               – ச.செம்பருத்தி, திருச்சி

ப7:        11.10.2021 ‘விடுதலை’யில் எனது விளக்கமான அறிக்கையைப் படிக்கவும்.

கே8:     இன்றைய இளைஞர்களுக்கு திராவிட இயக்கங்கள் பற்றிய புரிதலை உருவாக்க சிறப்புப் பயிற்சித் திட்டங்களை தி.க., தி.மு.க., ம.தி.மு.க., இணைந்து செய்தால் என்ன?

               – கல.சங்கத்தமிழன், செங்கை

ப8:        தி.க.வின் அடிப்படையும் அணுகு-முறையும் தனித்தன்மையானது. எனவே, தனித்தனியே விளக்குவதுதான் நல்லது!

கே9:     முற்பட்ட ஜாதியினர்க்கு 10% இட-ஒதுக்கீடு சரியல்ல என்று இப்போது உச்சநீதிமன்றத்தில் வலுவுடன் வாதிட்டால் என்ன?

               – ப.காளிதாசன், மீனம்பாக்கம்

ப9:        வழக்குகள் போடப்பட்டு 2 ஆண்டு-களாக நிலுவையில் உள்ளன. வலுவான வாதங்களை அப்போது விசாரணையில் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *