சுடுமண் வரைபட்டிகை வெளியிட்டவரின் மோசடியை வெளிப்படுத்திய செய்தியாளர்கள்!

நவம்பர் 01-15 2019

கடையில் வாங்கப்பட்டதாக ஒரு சுடுமண் வரைபட்கையைக் காட்டி, “மகாபாரதம் 3600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது. எனவே, அது ஆரிய நாகரிகம்“ என்று மோசடியாய் முடிவுகளை வெளியிட்ட நந்திதாவிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களே அவரின் மோசடியை வெளிப்படுத்தின.

கேள்வி: மகாபாரத யுத்தம் நடந்ததாகச் சொல்லப்படும் குருட்சேத்திரத்தில் நடந்த அகழாய்வில் மிகப் பழமையான படிநிலையே கி.மு. 1000 என நிர்ணயிக்கப்படுகிறது. ஆக, மகாபாரதம் நடந்ததாகக் வைத்துக்கொண்டாலும் அதன் பழமை 3,000 ஆண்டுகள்தான். ஆனால், அந்தக் கதையைச் சொல்லும் வரை பட்டிகை எப்படி 3600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்?

பதில்: சரி, 3600 ஆண்டு பழையது என்பதற்குப் பதிலாக 3,000 ஆண்டு பழமைன்னு வச்சுக்கலாம்.

கேள்வி: ஹரப்பா காலகட்டத்தில் குதிரை இல்லை என்றுதான் இப்போதுவரை சொல்லப்படுகிறது. நீங்கள் குதிரை இருப்பதாகச் சொல்கிறீர்களே?

பதில்:. ஆமாம். வட இந்தியாவில் இந்தக் கண்டுபிடிப்பைச் சொல்லி யிருந்தால், எவ்வளவு கொண்டாடியிருப்பார்கள் தெரியுமா?

கேள்வி: அப்படியானால், ஹரப்பா நாகரிகம் வேத கால, மகாபாரத நாகரிகமா?

பதில். இந்த வரைபட்டிகையைப் பார்த்தால் அப்படித்தானே தெரிகிறது?

கேள்வி: இந்த வரை பட்டிகை எங்கே தோண்டியெடுக்கப்பட்டது? அகழ்வாராய்ச்சியாளர் யார்? எந்த ஆழத்தில் எடுக்கப்பட்டது?

பதில்: இல்லைங்க. இதை, கடையில் வாங்கினோம். ஜெரெமி பைன்னு ஒரு ‘ஆர்ட் செல்லர்’ இருக்காரு. அவர் நேபாளத்தில ஒரு கடையில வாங்கியிருக்காரு. ஆனால், நாலு மாசமாக ஆராய்ச்சி பண்ணித்தான் இதைச் சொல்றோம்.

கேள்வி:. எப்படி ஆராய்ச்சி பண்ணீங்க.. அந்த வரை பட்டிகை உங்களிடம் இருக்கா?

பதில்: இல்லை. அந்த  இமேஜை வச்சு ஆராய்ச்சி செய்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *