இடஒதுக்கீடு!

ஜூன் 16-30

 

அது வஞ்சிக்கப்பட்டவனின்

வாழ்வாதாரம்!

பஞ்சமனுக்கும் –  பாவப்பட்டவனுக்குமான பரிகாரம்

அம்பேத்கர் அறிவாற்றலுக்கும்

பெரியார் போராட்டத்திற்கும் கிடைத்த அங்கீகாரம்!

 

கோடியில் புரளுபவன்

தேவையில்லை என்றாலும் – தெருக்

கோடியில் உழலுபவனுக்கு

அவசியம் தேவை இடஒதுக்கீடு!

 

இன்று,

சண்டாளன் என்று சொல்லும்

சனாதனக் கொள்கைக்கு -வென்

சாமரம் வீசுகின்றார்

நம்மூரு தமிழர்கள்!

 

விளக்கை நெருங்கும்

விட்டில் பூச்சிகளாய்

கொடுங் சூழ்ச்சிக் கிரையாகும்

நம் சமுதாய உறவுகள்!

 

ஏ! சமூகமே

சாதிவேற்றுமை இழிவு போக

சாதியத்தை விட்டொழி!

மனிதநேயம் – மலரவேண்டி

மதவெறியை களைந்திடு!

அதுதான் மானிட வளர்ச்சி

பொது மக்களின் மகிழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *