காடும் – கழனியும் ஏரும் – எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்!

பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்! எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம் ஈங்கிவை தாக்கிடினும், ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட பொங்கற் புதுநாள் அன்று மட்டும் புதுப்புன லாடி புத்தாடை அணிந்து, பூரிப் புடனே விழாநடத் திடுவோம்! என்னையோ வெனில், உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே விழைவு மிகக் கொண்டோம் அதனால்! காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்? உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால். உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்? உண்டி […]

மேலும்....