சுயமரியாதைச் சுடரொளி : சவுந்தரபாண்டியனார்

“சுயமரியாதை இயக்கச் சுடரொளி’’ பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தர-பாண்டியனார் அவர்களின் பிறந்த நாள் 15.9.1893. அந்தக் கால-கட்டத்தில் நாடார் சமுதாயம் என்பது கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளான ஒன்று. அத்தகைய ஒரு சமுதாயத்தில் தோன்றி, தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாசிலாப் பொதுத்தொண்டை ஆற்றிய பெருமகன் ஆவார். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர். 12 ஆண்டுகள் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து அரும்பணியாற்றியவர். அந்தக் காலகட்டத்தில் அவர் முன்மொழிந்த தீர்மானம் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது. […]

மேலும்....