தடைகளை உடையுங்கள் ! தன் காலில் நில்லுங்கள் ! – சிகரம்

பெண்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், அடிமை மற்றும் ஆதிக்கத் தளையிலிருந்து விடுவித்துக் கொள்வதும், அவர்கள் தங்களது நிலையை, தகுதியை, அறிவை, படிப்பை உயர்த்திக்கொள்வதும் தற்சார்பு நிலையை அடைவதும் அவசியம். சார்ந்தே வாழ வேண்டும் என்ற நிலைதான் ஒருவரை மற்றவருக்கு அடிமையாக்குகிறது. அந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் ஆதிக்கம் செலுத்துகின்றவர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, சுயமாகச் சம்பாதிக்கின்ற தகுதியை, வாய்ப்பைப் பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உயர்கல்வி படித்த பெண்கள் கூட, திருமணமானவுடன் தனது தகுதிகள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு […]

மேலும்....

இந்த வள்ளுவருக்கா காவி ? – சிகரம்

தமிழர்கள் மட்டுமே வாழ்ந்த இந்த பரந்த நிலப்பரப்பில் ஆரியர்கள் அண்டிப் பிழைக்க நுழைந்தார்கள். முதலில் தமிழர்களிடம் பிச்சையெடுத்துப் பிழைத்தார்கள். பின் சடங்கு செய்து அதற்குத் தட்சணை பெற்றுப் பிழைத்தார்கள். ஆக, அவர்கள் உழைத்துப் பிழைத்தவர்கள் அல்ல. அதேபோல், தமிழர்களிடமிருந்து எல்லாவற்றையும் அவர்கள் கைப்பற்றி, திரித்து, மாற்றி, தனதாக்கிக் கொண்டார்கள். அவர்களுடைய இந்தக் கைப்பற்றும் முயற்சி இன்றளவும் நடந்துவருகிறது. முதலில் தமிழர் நிலத்தைக் கைப்பற்றினர், பின்பு தமிழ் மொழியைக் களவாடிச் சமஸ்கிருதத்தை உருவாக்கினர்; தமிழ்மொழியைச் சிதைத்தனர். அடுத்து நம் […]

மேலும்....

எரிமலை வெடிப்பா ? எரிதழல் சிவனா ?

… சிகரம் … திருவண்ணாமலை என்றாலே ‘தீபம்’ எல்லோர் நினைவிற்கும் வரும். அந்தத் தீபத்திற்கு ஒரு புராணக் கதை உண்டு. சிவன் அந்த இடத்தில் (திருவண்ணாமலையுள்ள இடத்தில்) பூமிக்கும் வானத்துக்குமாய் நெருப்பு வடிவில் நின்றார். அதனாலே அது நெருப்பு மலையாயிற்று. நெருப்பாய் நின்ற சிவனின் முடியைக் காண பிரம்மாவும், அடியைக் காண விஷ்ணுவும் முறையே அன்னப் பறவையாகவும், பன்றியாகவும் உருமாறி முயன்று தோற்றனர் என்பதே அப்புராணம். அவ்வாறு சிவன் எரிதழலாய் நின்றதன் அடையாளமாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் மலையின் […]

மேலும்....

தீபாவளி இந்து மதப் பண்டிகையா?

அடுத்தவருடைய அறிவு, மொழி, விழாக்கள், வழிபாடுகள், மரபுகள்,நூல்கள் போன்றவற்றை அபகரித்து தமதாக்கிக்-கொண்டு, மாற்றாருக்கு உரியவற்றை மறைப்பது, அழிப்பது ஆரியப் பார்ப்பனர்கள் பல நூற்றாண்டுகளாய்ச் செய்துவரும் மோசடியாகும். தமிழர்களின் தொன்மை நாகரிகங்களைத் தனதாக்குவதில் தீவிரம் காட்டுகின்றனர். தமிழரின் வானியல் அறிவைத் தமதாக்கினர். தமிழர்களின் தொன்மை மருத்துவமான சித்த மருத்துவத்தைக் களவாடி ஆயுர்வேத மருத்துவமாக மாற்றிக் கொண்டு, சித்த மருத்துவத்தை ஒழித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத்தை வளர்க்க, பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் இசையை கர்நாடக சங்கீதமாக மாற்றி, தமிழிசையை […]

மேலும்....

அண்ணாவிடம் அரசியல்வாதிகள் படிக்க வேண்டிய பாடம்

– சிகரம் அறிஞர் அண்ணா ஏழ்மையில் எளிமையாய்க் கற்று உயர்ந்து தமிழ்நாட்டின் முதல்வர் ஆனவர். இன்றைய அரசியலில் வட்டச் செயலர்கூட அல்ல ஓர் ஊரின் கிளைச் செயலர்கூட ஆடம்பரமாய், பந்தா காட்டி, ஆட்கள் புடைசூழ ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அவரவர் திறமைக்கு ஏற்பச் சுருட்டுகின்றனர்.ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராய் இருந்த அண்ணா எப்படி நடந்துகொண்டார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும் பாடமாகப் படிக்க வேண்டும். வேண்டியவருக்குச் சலுகை காட்டாத நேர்மை . அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது திரு. சி.வி.இராசகோபால் அவர்கள் […]

மேலும்....