கவிதை: நாடுய்யக் காண்போம் நாமே!

முனைவர் கடவூர் மணிமாறன் அதிகார வாய்ப்பாலே வரம்பு மீறி ஆணவத்தின் உச்சத்தில் அமர்ந்து கொண்டு குதிக்கிறது குள்ளநரிக் கூட்டம்! மூடக் குழிக்குள்ளே வீழ்ந்தோரோ எழவே மாட்டார்! புதிராக இருக்கிறது; தமிழ்நா டென்றே புகன்றிடவே கூடாதாம்; முகவர் கூற்றை மதியுள்ளோர் ஏற்பாரோ? சட்டம் தன்னை மதிக்காதார் இழைப்பதுவும் மானக் கேடே! எப்படியும் வென்றிடவே வேண்டும் என்னும் எண்ணத்தில் பொழுதெல்லாம் இருப்போர், வீணே செப்பரிய ஏமாற்றுச் செயல்கள் தம்மில் சிறகினையே விரிக்கின்றார்; நாட்டு மக்கள் ஒப்போலை பறிப்பதிலே முனைப்புக் கொள்வார்! […]

மேலும்....