கவிதை : இனமானப் பேராசிரியர் என்றும் வாழ்வார்!

-முனைவர் கடவூர் மணிமாறன் அறிவார்ந்த சிந்தனையர்! அய்யா அண்ணா அடிச்சுவட்டில் பிறழாமல் வாணாள் எல்லாம் அறியாமை இருள்கிழிக்க முழங்கி வந்த அன்பழகப் பேராசான்; எந்த நாளும் நெறிதவறா இலக்கணமாய்த் தமிழர் நெஞ்சில் நிலையாக இடம்பிடித்த நேர்மைக் குன்றம்! குறிக்கோளின் தடம்பற்றிக் கொள்கை காக்கும் குறளனைய இலக்கியமாய்த் திகழ்ந்து வந்தார்! மடைதிறந்த வெள்ளமெனப் பொழியும் கொண்டல்! மாற்றாரும் மதிக்கின்ற பொதிகைத் தென்றல்! தடைகளுக்கு முடங்காமல் உழைத்து வந்த தன்மான இனமான அறிவுத் தேனீ! படைமறவர் போலிருந்து கழகம் காத்த […]

மேலும்....