கவிதை : பெரியாரைப் பெற்றிழந்தோம்! பெற்றி யிழந்தோம்!

பெரும்பணியைச் சுமந்த உடல்! பெரும்புகழைச் சுமந்த உயிர் ‘பெரியார்’ என்னும் அரும்பெயரைச் சுமந்த நரை! அழற்கதிரைச் சுமந்த மதி; அறியா மைமேல் இரும்புலக்கை மொத்துதல் போல் எடுக்காமல் அடித்த அடி! எரிபோல் பேச்சு! பெரும்புதுமை! அடடா, இப் பெரியாரைத் தமிழ்நாடும் பெற்றதம்மா!   மணிச்சுரங்கம் போல்அவரின் மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த மழலைக் கொச்சை! அணிச்சரம் போல் மளமளென அவிழ்கின்ற பச்சை நடை! ஆரி யத்தைத் துணிச்சலுடன் நின்றெதிர்த்துத் துவைத்தெடுத்த வெங்களிறு! தோல்வி யில்லாப் பணிச்செங்கோ! அடடா, இப் பகுத்தறிவைத் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : ஆடாதீர் அக்ரகாரத்தவரே!

கே:       ‘கோயில்களில் உள்ள சிற்பங்கள் ஆபாசமாக இருக்கின்றன’ என்று பேசியதற்காக திருமாவளவனை பார்க்கும் இடத்திலெல்லாம் அடியுங்கள் என்று நடிகை காயத்ரி ரகுராம் பேசியிருப்பது பற்றி?                 -நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்  திருமாவளவன் ப:           மாறுபட்ட கருத்தை _ அதுவும் ஆதாரங்கள் உள்ள ஒரு கருத்தைக் கூறியதற்காக அக்கிரகார அம்மாமிகள் இப்படித் துடிக்கலாமா? வன்முறையைத் தூண்டும் வழக்கு இவர் மீது பாய வேண்டாமா?                 காலம் இப்படியே போகாது. நீதிக்கு வணங்க வேண்டிய பருவம் விரைவில் வரும். ஆடாதீர்! […]

மேலும்....

பெண்ணால் முடியும் : ”மானுடவியலில் முதல் ஆராய்ச்சி மாணவி நான்!”

அறிவியல், வரலாறு, புவியியல், சமூகவியல், கணிதம் என தனித்தனியே துறை இருக்கு. “அதென்ன மானுடவியல்(anthropology)?’’ என்ற கேள்விகளோடு, இதில் தமிழ் வழியில் ஆராய்ச்சி படிப்பை முதன்முறையாக மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றிருக்கும் ஹேமமாலினியோடு பேசியபோது… “நான் கிராமத்துச் சூழலில் வளர்ந்த பெண். பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தேன். இருந்தாலும் பி.ஏ. வரலாறு படித்தேன். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இணைந்து எம்.ஏ. மானுடவியலைத் தேர்வு செய்தேன். கலைக்கூத்தாடிகள், நாடோடிகளை எல்லாம் சந்தித்தபோது மானுடவியலில் பி.எச்.டி […]

மேலும்....

வாகனங்களின் டியூப்பில் நைட்ரஜன் வாயுவின் பயன்!

பெட்ரோல் ஸ்டேஷனில் டூவீலர் மற்றும் கார்களின் டியூப்களில் காற்றடித்துக் கொள்வது என்பது காலம்காலமாக நடந்து வருவதுதான். இப்போதெல்லாம் சில பெட்ரோல் ஸ்டேஷன்களில் நைட்ரஜன் காற்றை நம் வண்டியின் டியூப்களில் செலுத்திக் கொள்ள வசதி வந்திருக்கிறது. காற்று என்பதிலேயே 78 சதவிகிதம் நைட்ரஜனும், 21 சதவிகிதம் ஆக்ஸிஜனும் உள்ளன. அப்படியானால் 78 சதவிகித நைட்ரஜனை நாம் காலம்காலமாக வண்டியின் டியூப்களுக்கு ஏற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். இந்த 78 சதவிகிதம் என்பது 100 சதவிகிதம் என்று ஆவதால் என்ன நன்மை? அதாவது […]

மேலும்....

சிறுகதை : வழி

அன்று அலமிக்குத் தூக்கம் வரவில்லை. நினைவுகள் குவிந்தன. சொல்லமுடியாத சோகம் நெஞ்சையடைத்தது. மனக்குரங்கு கட்டுக்கடங்காமல் ஓடியது. தன்னருகில் இருந்த ஒற்றை விளக்கைச் சற்று தூண்டினாள். உடல் வியர்க்கிறது. தேகம், என்னமோ ஒருமாதிரியாக, சொல்ல முடியாதபடி தவித்தது. அவள் விதவை. நினைவு அய்ந்து வருஷங்களுக்கு முன்பு ஓடியது. ஒரு வருஷம் சென்றது தெரியாதபடி வாழ்க்கை, இன்பத்தின் முன்னொளி போலத் துரிதமாகச் சென்றது. பிறகு அந்த நான்கு வருஷங்களும் பிணிவாய்ப்பட்ட கணவனின் சிச்ருஷை என்கிற தியாகத்தில், வாழ்க்கையின் முன்னொளி செவ்வானமாக […]

மேலும்....