கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்; வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்; நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும் தலைவர் இவரே! அறிஞர் அண்ணா கலைஞர் போன்றோர் கடமையாற்றிட முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்! பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்; பகுத்தறி வென்னும் பாதை காட்டி மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்; சுயமரி யாதை இயக்கத் தாலே நயமுறு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஆன்மீக எண்ணங்களில் மனிதர்கள் மிக எளிதில் அடிமையாகக் காரணம் என்ன? – சா.நாராயணன், மதுரை பதில் : பேராசை, பயம், தெளிவற்ற பாதை குழப்பம் _ இவைதான். ஆன்மீகம் என்பதே புரட்டு. ஆத்மா – ஆன்மி – ஆன்மீகம் = ஆத்மாவே கற்பனைதானே! கேள்வி : பழுதடைந்த கோயில்களை மிக துரிதமாக புதுப்பிக்க முனைவோர் பாழடைந்த கல்விச்சாலைகளை சீரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள் வதில்லையே? – வீ. அரசு, வேலூர் பதில் : பக்திபோதை, […]

மேலும்....

சிறுகதை – கடவுளால் ஆகாதது

– டி,கே,சீனிவாசன் மணி அடித்தது. கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது. ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி எப்போ வருவாரோ? எனக் காத்திருப்பதுபோல யாருடைய வரவுக்காகவோ எல்லோரும் காத்திருந்தனர். கட்டுப் புத்தகங்களை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அந்தப் பெண்கள். இடத்தில்போய் உட்காரும் வரையில் பார்வையைத் துணைக்கனுப்பி உட்கார்ந்தவுடன் இழுத்துக் கொண்டனர் அத்தனை ஆடவர்களும். பாடம் ஆரம்பித்தது. நான் அன்றுதான் புதிதாக அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். நான் படித்த  […]

மேலும்....

சிந்தனைத் துளி – தந்தை பெரியார்

புராணப் பண்டிதர்களைப் பொதுமக்கள் ஆதரிப்பது கொள்ளியை எடுத்து தலையைச் சொறிவது போன்றது. மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தனது மாடுகளுக்குப் போடும் அடையாளம் போன்றதே. கல்லைக் கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்குச் சமத்துவமான மனிதனாக்கக் கூடாது? மனிதனுக்கு இன்று வேண்டியது பணமோ, வீடு, வாகனமோ அல்ல. புத்தி வளர்ச்சிதான். மதக் கட்டளைகளையும் கடவுள் நம்பிக்கையையும் கொண்ட அடிமை ஒரு நாளும் விடுதலையடைய முடியாது. மனிதனுக்கு வெட்கமும், ரோசமும் ஏற்படவே சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டது. […]

மேலும்....

தள புராணம்

ஒரு நாள் ஒரு கவிதை www.orukavithai.com கவிதைக்கென எண்ணற்ற தளங்கள் செயல்படுகின்றன. தடுக்கி விழுந்தால் கவிதைத் தளம் என்கிற சூழல் இருந்த காலகட்டமும் தமிழ் இணையச் சூழலில் இருந்தது. ஆனால் அவற்றுள் சற்றே மாறுபட்டு இருக்கிறது ஒருகவிதை.காம். காரணமும் அதுவே – ஒரு நாள் ஒரு கவிதை! புதிய பல கவிஞர்களின் கவிதைகள், பழந்தமிழ் இலக்கியங்களில் இருந்து கவிதைச் செறிவுள்ள பாக்கள், நயம் பொருந்திய திரைக் கவிதைகள், ஹைக்கூ என அனைத்தும் உண்டு. முதல் பக்கத்தில் நாளொன்றுக்கு […]

மேலும்....