Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> ஜூலை 01-15 -> பகுத்தறிவு குருடர்கள்!

பகுத்தறிவு குருடர்கள்!

 

கூனிக் குறுகி

                        குப்பையில் கிடந்த

குருடி ஒருத்தியை

                        குசலங் கேட்டு

கூட்டு சேர்ந்த

                        இன்னொரு குருடி;

கொஞ்ச நேரத்தில்

                        குழைந்து பேசி

நெஞ்சம் நிறைந்தாள்!

 

பசிக்கு உணவு

                        பகிர்ந்து தந்து,

வசிக்கும் இடத்தில்

                        வந்து தங்க

வாவென் றழைத்தாள்!

 

இதுவுமொரு இனப்பற்றென்ற

                        ஏகாம்பர சாமி,

இருட்டில் வாழும் இவளுக்கு

                        இறைவன் தந்த துணையென்றார்!

 

பார்வையற்ற குருடே பரவாயில்லை

                        இவரோ பகுத்தறிவுக் குருடு!

குருடிக்கு இறைவன்

                        கொடுத்தா னென்றால்,

பார்வையை அல்லவா

                        கொடுத் திருக்கணும்?

 

 

வாசகர் கடிதம்

 

‘உண்மை’ (ஜூன் 16 - 30) இதழில் ‘நீட்’ தேர்வு படுகொலைகள்! மோசடிகள்!எனும் தலைப்பில் வெளிவந்துள்ள எழுத்தாளர் மஞ்சை வசந்தனின் கட்டுரை, ‘நீட்’ எனும் மருத்துவ நுழைவுத் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.

கிராமப்புற ஏழை - எளிய மாணவர்கள் மருத்துவராக வருவதை தடுக்கும் கெட்ட நோக்கத்தில் மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு ‘நீட்’ எனும் நஞ்சை மாணவர்களிடையே திணித்ததின் மூலம் ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் வஞ்சகச் செயலை அரங்கேற்றியுள்ளது.

தமிழ்நாடு, தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா ஆண்ட மண். எனவே, ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் இழிவான செயலில் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கட்சி பேதமின்றி ஜாதி - மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’டை விரட்டி அடித்து ‘சமூகநீதி’யை வென்றெடுப்பார்கள் என்பது உறுதி.

வெல்க சமூகநீதி! வீழ்க ஆரியம்!

- சீதாலட்சுமி, திண்டிவனம்

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit    பகுத்தறிவு  குருடர்கள்! in FaceBook Submit    பகுத்தறிவு  குருடர்கள்! in Google Bookmarks Submit    பகுத்தறிவு  குருடர்கள்! in Twitter Submit    பகுத்தறிவு  குருடர்கள்! in Twitter

உண்மையில் தேட

wrapper

பிப்ரவரி 16-28 2019

  • நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!
  • அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!
  • அப்படிப் போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)
  • அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
  • உங்களுக்குத் தெரியுமா ?
  • உண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)
  • ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?
  • கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !
  • கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
  • கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?
  • குறும்படம் : ஜீவநதி
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
  • சிறுகதை : கடவுள் நகரங்கள்!
  • டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
  • தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?
  • நுழைவாயில்
  • நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்
  • புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
  • பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!
  • பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்
  • மருத்துவம் : நிலவேம்பு
  • மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!
  • வாசகர் மடல்
  • வாழ்வில் இணைய
  • ‘சுயமரியாதைச் சுடரொளி’
  • ”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.