Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> Unmaionline -> 2018 -> ஜூன் 01-15 -> ஆசிரியர் பதில்கள்

ஆசிரியர் பதில்கள்

 

பா.ஜ.க பாசிசத்தை வீழ்த்த

மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் ஒன்றுபட வேண்டும்

 

y26.jpg - 88.25 KB 

 

கே:              அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். படிப்பில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு திணிக்க முயல்வது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயல் அல்லவா?

                        - சீ. லட்சுமிபதி, தாம்பரம்

ப:                   அதிலென்ன அய்யம்? நூற்றுக்கு நூறு உங்கள் கருத்து சரியானது!

கே:              கர்நாடக தேர்தல் உணர்த்தும் பாடம் என்ன?

                        - கா.வெண்ணிலா, புதுக்கோட்டை

ப:                   பா.ஜ.க.வின் பாசிசத்தினை தோற்கடிக்க மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் _ கட்சிகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கே:              பிரதமர் மோடியும், பி.ஜே.பி தலைவர் அமித்ஷாவும் வீழ்த்தவே முடியாத தலைவர்களா?

                        - வே.முனியசாமி, வேலூர்

ப:                   உலகில் வீழ்த்தவே முடியாத தலைவர்கள் என்பது இயற்கை விதிக்கே முரணானது. வல்லவர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள் தோற்கடிக்கப்பட்டவர்கள்தான் என்பது வரலாறு!

கே:              பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது அரசியல் பின்புலமா?

- தா.வேலாயுதம், திருத்தணி

ப:                   ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் பாடகர் கோவனுக்கு ஒரு நீதி! பூணூலுக்கு மற்றொரு நீதி! மனுதர்ம ஆட்சிதான் நடைபெறுகிறது!

கே:              நாட்டில் கோயில் சிலைகள் திருட்டு அதிகமாகி வருவதால் மக்களிடையே கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் கருதலாமா?

                        - சோ.கன்னியப்பன், பொற்பந்தல்

ப:                   கடவுள் நம்பிக்கை _ உண்மையாகவே இருப்பவர்கள் மிக மிகக் குறைவே!

கே:              தூத்துக்குடியில் நடந்த கொடுமையான துப்பாக்கிச் சூடு, ஆரியப் பார்ப்பன ஆணைப்படி அ.தி.மு.க. அடிமையரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுவது பற்றி தங்கள் கருத்து என்ன?

                        - தீ.வீரபத்திரன்,திண்டிவனம்

ப:                   யாருடைய ஆணை என்று நாம் உறுதிப்படுத்த முடியாது; நிச்சயம் இது மக்கள் விரோதப் போக்கு! தமிழக அரசின் தவறான ஆளுமையின் தவிர்க்க முடியாதது. நுண்ணறிவுப் பிரிவுமூலம் முன்கூட்டியே இவ்வளவு பெருங்கூட்டம் திரளுவார்கள் என்பதைக்கூட அறியவோ, தடுக்கவோ அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டாமா? ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.

கே:              அன்னை மணியம்மையாரைப் போல் அனைத்துப் பெண்களும் இருந்துவிட்டால், நகைநாட்டம் உட்பட பல பெண்ணடிமைக் காரணங்கள் ஒழியுமல்லவா?

                        - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:                   அதிலென்ன சந்தேகம்? முன்பெல்லாம்  கேரளப் பெண்கள் குறைந்த அளவே உடம்பில் நகை அணிவார்கள். ஆனால், அவர்கள்கூட ‘கெட்டு’விட்டார்கள் நகை அணிதலில்!

கே:              கர்நாடகத்தை கவ்வ நினைத்த காவிப் பாம்பின் தலைமேல் சித்தராமையா (காங்கிரஸ்) சம்மட்டி அடிகொடுத்ததுபோல், நாடு முழுவதும் வலிமையுள்ள மாநிலக் கட்சியுடன் கூட்டணி அமைந்தால் ஆரிய ஆதிக்கம் அகலுமல்லவா?

                        - இல.சங்கத்தமிழன், செங்கை

ப:                   நிச்சயம் வலிமை வாய்ந்த பா.ஜ.க._ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்புக் கூட்டணி உதயமாகும் _ ஆகவேண்டும் என்பது முக்கியமாகும்!

கே:              உலகப் பற்றைத் துறந்ததாய் கூறும் பெரிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகான், மகரிஷிகள் புற்றுநோய், ஜூரம், மாரடைப்பால் செத்தாலும் முக்தி அடைந்தார் என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா?

                        - க.அரவிந்த், தெற்கிருப்பு

ப:                   இதற்குப் பெயர்தான் பார்ப்பனரின் பிரச்சார உத்தி _ தந்திரம் என்பது! கொலை, பித்தலாட்டம், ஜெயில், பெண்களிடம் சரச சல்லாபம் செய்தாலும் ‘அவாள்’ மகான்கள்தானே! ‘அவாளது’ அகராதிப்படி! இல்லையா?

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit ஆசிரியர் பதில்கள் in Twitter Submit ஆசிரியர் பதில்கள் in Twitter

உண்மையில் தேட

wrapper

பிப்ரவரி 16-28 2019

  • நிகழ்வு: உயர் ஜாதியினருக்கு பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு கூடாது ஏன்? ஆர்த்தெழுந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்!
  • அதனால்தான் அவர் பெரியார்! பெரியார் காமராசர் அரிய உரையாடல்!
  • அப்படிப் போடு!
  • அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (220)
  • அய்யாவின் தொடக்க காலம் முதல் இயக்கத்தோடு கலந்தவர் ஆசிரியர்!
  • உங்களுக்குத் தெரியுமா ?
  • உண்மை பத்திரிகையின் உரிமையை விளக்கும் அறிக்கை
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (30)
  • ஏழு குதிரை தேரில் சூரியன் சுற்றுகிறாரா?
  • கவர் ஸ்டோரி : மனித தர்மத்திற்கு எதிரான மனுதர்மம் எரிக்கப்பட்டது ! எங்கெங்கும் எழுச்சி ! எதிரிகள் மிரட்சி !
  • கவர் ஸ்டோரி: சமூக நீதிக்களத்தில் சரித்திரம் படைத்த டில்லி சமூகநீதிக் கருத்தரங்கம்
  • கவிதை : பிள்ளையாரே, பேசுவீரா?
  • குறும்படம் : ஜீவநதி
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்
  • சிறுகதை : கடவுள் நகரங்கள்!
  • டில்லி மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை!
  • தலையங்கம் : தேர்தல் ஆதாயத்திற்காக மதக் கலவரத்தைத் தூண்டுவதா?
  • நுழைவாயில்
  • நூல் அறிமுகம் :அழகிய பூக்கள்
  • புகை மாசிலிருந்து காக்கும் முகமூடி
  • பெண்ணால் முடியும் : வறுமையிலும் வாகைசூடும் சாதனைப் பெண் ஜோதி!
  • பெரியார் பேசுகிறார் : மாணவர்களும் பகுத்தறிவும்
  • மருத்துவம் : நிலவேம்பு
  • மாட்டு மூத்திர மகத்துவம் பேசுவோருக்கு மரண அடி! அதன் கேடுபற்றி விஞ்ஞானிகள் அறிக்கை!
  • வாசகர் மடல்
  • வாழ்வில் இணைய
  • ‘சுயமரியாதைச் சுடரொளி’
  • ”எண்ணெய் செலவுதான் பிள்ளை பிழைக்காது!”
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.