Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம்

deer-eating-plastics-002.jpg - 100.09 KB 

¨                    சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 8 பில்லியன் டன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

 

¨                    ஒரே ஒரு பிளாஸ்டிக் பையோ, பிளாஸ்டிக் பொருளோ மண்ணோடு மக்கிப் போக 1000 ஆண்டுகளுக்கு மேலாகும்.

 

¨                    ஆண்டுக்கு 10,00,000_க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பாலித்தீனை சாப்பிடுவதால் மட்டுமே செத்து மடிகின்றன. இந்த லிஸ்ட்டில் மனிதனும்         இடம் பிடித்துள்ளது நமக்கான ரெட் அலர்ட்.

¨                    ஒரு நிமிடத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்கள் உலக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

¨                    12 நிமிடங்களுக்கு ஒரு பிளாஸ்டிக் பை என்ற அடிப்படையில் உலக மக்கள் பிளாஸ்டிக் பையை பயன்படுத்தி வருகின்றனர்.

¨                    மீன், திமிங்கிலம, சுறா, கடல் பறவை என 1,00,000க்கும் மேற்பட் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக்கால் அழிந்து வருகின்றன.

¨                    கடந்த 10 ஆண்டுகளாகத்தான் பிளாஸ்டிக் உற்பத்தி தொழில் வேகம் பிடித்துள்ளது. 1990_2000 வரையிலான கடந்த நூற்றாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை காட்டிலும் இது பல மடங்கு அதிகம்.

¨                    8 மில்லியனுக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடலுக்குள் கலந்துள்ளன.

¨                    உலக அளவில் உருவாகும் 2.5 பில்லியன் மெட்ரிக் டன் திடக்கழிவில் 275 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்துள்ளன.

¨                    அடுத்த 30 ஆண்டுகளில் பிளாஸ்டிக்கத்தான் அனைத்து உயிரினத்திற்கும் எமன் என்கிறது உலக சுகாதார மய்யம். அதை சூழலியல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

¨                    ஆண்டுக்கு 10 சதவிகிதத்திற்கும் கீழ்தான் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

¨                    சட்னி, சாம்பார், டீ, ஜூஸ் என தமிழகத்தில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 3000 டன்னுக்கு மேற்பட்ட பாலித்தீன் பைகள் தென் இந்திய மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

¨                    சென்னையில் மட்டுமே நாள் ஒன்றுக்கு 40 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதில் 75 சதவிகிதம் பாலித்தீன் பைகள்தான்.

¨                    2015இல் சென்னை மாநகரை மழை வெள்ளம் சூழ, பாலித்தீன் கழிவுகளும் மிக முக்கிய காரணம் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள்.

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம் in FaceBook Submit பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம் in Google Bookmarks Submit பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம் in Twitter Submit பிளாஸ்டிக் பொருட்களால் பேரபாயம் in Twitter

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.