Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
  • Print
  • Email

ஆசிரியர் பதில்கள்


வர்ண உணர்வால் நீதி கெட்டு வருகிறது!

10.jpg - 88.21 KB 

கே:    டாக்டர் அம்பேத்கரை ஏற்று பெரியாரை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பியின் நோக்கு இருவரையும் ஒழிப்பதுதான், அணுகுமுறையில்தான் வேறுபாடு எனக் கொள்ளலாமா?
        - சீ. லட்சுமிபதி, தாம்பரம்
ப:    கேள்வியைக் கேட்டு பதிலையும் தந்துள்ள நண்பருக்கு எமது நன்றி! உங்கள் கருத்துக்கு 100க்கு 100 மதிப்பெண்கள்!!

கே:    நீதித்துறையின் கண்ணியத்தை பாதுகாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வர் பேசி இருப்பதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளும் உணர்த்தும் உண்மை என்ன?
        - மா.வேல்முருகன், வேலூர்
ப:    அங்கு வர்ணமும் வர்க்கமும் உள்நீரோட்டமாக இழையோடுவதால் _ நீதி கெட்டு வருகிறது! வர்ணப் பார்வையே!

கே:    விசுவஇந்து பரிஷத் அமைப்பில் இருந்து பிரவீன் தொகாடியா விலகியதில் இருப்பது அவ்வமைப்பு மோதலின் உச்சிக்கே சென்றுவிட்டதன் அடையாளம்தானே!          -     - வே.காளியப்பன், சேலம்
ப:    அது மட்டுமா? ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்றவர்கள் தங்களிடம் மாறுபடுபவரை ‘அழிக்க’ எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது இதிலிருந்து புரிகிறதா? திரிசூலத்தை எடுத்தவர் என்கவுண்டருக்குப் பயந்து மருத்துவமனையில் பதுங்க வேண்டிய நிலைதான் மோடி ராஜ்யத்தில்!

கே:    பி.ஜே.பி ஆளும் குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால், சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்; சிறார் வயது வரம்பு குறைக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்தைத்தானே காட்டுகின்றன?    
      -------தே.பாலசுப்பிரமணி, திண்டிவனம்
ப:    அதை, அண்மையில் திட்டமிட்டே ஜம்முகாஷ்மீர் கத்துவா என்ற இடத்தில் 8 வயது சிறுமியை _ அவள் ஒரு முஸ்லீம் பெண் என்பதற்காக _ பா.ஜ.க. கும்பல் கோஷ்டியாக வன்புணர்ச்சி _ பிறகு கொலை நடத்தி, ஹிந்து ராஷ்டிரத்தின் ஒத்திகை கொடுமையாக, கோரமாக நடந்துள்ளதை உணர்த்துகிறது!

கே:    மதவாத சக்திகளுடன் என்றைக்கும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று டி.டி.வி.தினகரன் திட்டவட்டமாகக் கூறியிருப்பது கொள்கைத் தெளிவா?
        -     -தோ.மாரிமுத்து, உடுமலை
ப:    கொள்கைத் தெளிவுதான் --_ Expediency_ ‘சந்தர்ப்ப சூழ்நிலை அரசியல் அல்ல’ என்பதால் நிச்சயம் வரவேற்கலாம்!

கே:    தேர்தலில் பெறும் வாக்கு அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது சமூகநீதித் தத்துவத்தை வளரச் செய்யுமா?    
        - இல.சங்கத்தமிழன், செங்கை
ப:    வாக்கு அடிப்படை விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அரசியல் என்பதற்கும் _ சமூகநீதி _ இடஒதுக்கீடு _ வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்றவைகளும் வெவ்வேறானவை!

கே:    இடஒதுக்கீடு முறையால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று மத்தியப் பிரதேச அமைச்சர் கோபால் பார்கவா கூறியுள்ளது அறியாமையாலா, ஆதிக்க வெறியாலா?
-தா.செண்பகப் பிரியா, திருவள்ளூர்
ப:    பார்கவா என்பவர் பார்ப்பனர்; பார்ப்பனர் எவருக்கும் இடஒதுக்கீடு இனிக்கவா செய்யும்? பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். உண்மைக் குரலை அவர் பதிவு செய்துள்ளார்!

கே:    ‘காவியின் தூதுவர் ரஜினிகாந்த்’ என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா சாடியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
              - -மா.சுந்தரமூர்த்தி, திருச்சி
ப:    “உண்மை ஒரு நாள் வெளியாகும்; அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்’’ என்ற பட்டுக்கோட்டை கவிஞரின் நினைவுவருகிறது!

கே:    தர்பைப் புல் ஏந்திய கைகள் கடப்பாரையை எடுக்கத் துடிப்பது எதனைக் காட்டுகிறது?
      - நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப:    பார்ப்பனரின் புதிய துணிவு நாடகத்திற்கும் அதற்கு காரணமான மத்திய, மாநில ஆட்சிகளின் பின்புலத்தையும் காட்டுகிறது! குரைப்பது கடிக்காது!

கே:    கோர்ட் அவமதிப்பு வழக்கில் தனி நபருக்கு சிறைதண்டனை வழங்கும் நீதிபதிகள், கோர்ட்டை அவமதிக்கும் அரசுக்கு (அ) அரசுக் கட்டிலில் இருப்போருக்கு கடுமையான தண்டனையை வழங்க முடியாதா?
        - தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
ப:    தீர்ப்பில் எவ்வளவு கடுமையினையும் வழங்கத்தான் அவர்களால் முடியும். செயல்படுத்த முடியாதே! என்ன செய்ய?

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit   ஆசிரியர் பதில்கள் in FaceBook Submit   ஆசிரியர் பதில்கள் in Google Bookmarks Submit   ஆசிரியர் பதில்கள் in Twitter Submit   ஆசிரியர் பதில்கள் in Twitter

wrapper

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.