Main menu
  • முகப்பு
  • வலைக்காட்சி
  • விடுதலை
  • முந்தைய இதழ்கள்
    • 2020
    • 2019
    • 2018
    • 2017
    • 2016
    • 2015
    • 2014
    • 2013
    • 2012
    • 2011
  • புத்தகம் வாங்க
Home -> 2015 இதழ்கள் -> மே 01-15 -> கருத்து
Parent Category:
2015
Category:
மே 01-15
  • Print
  • Email

கருத்து

மாட்டிறைச்சி உண்பது தனி நபரின் உரிமை. அதை அரசே தடுப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. பொதுமக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை அரசு எப்படித் தீர்மானிக்க முடியும்?

- கிரீஷ் கர்னாட், கன்னட எழுத்தாளர்

சுதந்திர நாட்டில் ஒருவருக்கு விருப்பமான உணவை உண்பதற்கு முழு உரிமை உள்ளது. சைவம், அசைவம் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இதில் அரசு தலையிட முடியாது.

- சித்தராமையா, முதல் அமைச்சர், கருநாடகா.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நான்  மதிக்கிறேன். ஆனால் அவரை நம்பத் தயாராக இல்லை. வெனிசுலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா முயற்சிக்கிறது. அது ஒருபோதும் நடக்காது.

- நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா அதிபர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிகள் என்று எதுவும் கிடையாது. இந்த ஜாதிகள் எல்லாம் அண்மைக் காலங்களில் வந்தது. இந்த ஜாதிப் பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இவை இரண்டும் கிடைத்துவிட்டால் ஜாதி தானாகவே ஒழிந்துவிடும்.

- நீதிபதி எஸ்.தமிழ்வாணன், சென்னை உயர் நீதிமன்றம்.

ஜாதியிலிருந்துதான் இந்தியாவில் அனைவருக்கும் அடையாளம் வழங்கப்படுகிறது. ஜாதி என்கிற அடையாளம் இருக்கிறவரைக்கும் யாருக்கும் விடுதலை கிடையாது.

- வி.வசந்திதேவி, மேனாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

பெண்கள் பொருளாதார ரீதியில் விடுதலை பெற வேண்டியது அவசியம். அதற்கு கல்வி அறிவு மிகமிக அவசியம். சட்டத்துறையில் பெண்கள் முன்னேறினால் அனைத்துப் பிரிவுப் பெண்களுக்கும் அது பயன்படும்.

பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு கேட்பதைவிட ஆண்கள் போலவே சம உரிமைகோரி அந்த நிலையை ஏற்படுத்துவதே சிறந்தது.

- எஸ்.கே.கவுல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

 

19ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் மற்றும் 20ஆவது திருத்தம் ஆகியன நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும். அதன்பிறகே பொதுத்தேர்தல் நடத்தப்படும்.

-மைத்ரிபால சிறிசேனா, இலங்கை அதிபர்.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

- ஸ்வராஜ் பால், பிரிட்டிஷ் தொழிலதிபர்.

 

செய்திகளை பகிர்ந்து கொள்ள

Submit கருத்து in FaceBook Submit கருத்து in Google Bookmarks Submit கருத்து in Twitter Submit கருத்து in Twitter
  • < Prev
  • Next >

உண்மையில் தேட

உண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா

wrapper

ஜனவரி 01-15, 2020

  • அப்படிப்போடு அப்படிப்போடு
  • அய்யாவின் அடிச்சுவட்டில் ....: இயக்க வரலாறான தன் வரலாறு (259)
  • ஆசிரியர் பதில்கள்:”குட்டி கார்ப்பரேட் ரங்கநாதய்யர்”
  • ஆய்வுக் கட்டுரை: புலவர் மாவண்ணா தேவராசனின் ‘பெரியார் பிள்ளைத் தமிழ்’ (2)
  • எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை! (69) : கோவில் நுழைவுப் போராட்டம் இன்றைய நிலை!
  • கட்டுரை: புத்தாண்டும் உழவர் போராட்டமும்
  • கவிதை : தமிழர் திருநாளில் உறுதி ஏற்போம்!
  • சிந்தனை: கேள்விகளின் நாயகர் நெய்வேலி க.தியாகராஜன்!
  • சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்: இதழாளர்
  • சிறுகதை: அப்பாவி விவசாயிங்க..!
  • தலையங்கம்: என்று ஒழியும் இந்த மூடத்தனம்?
  • பெண்ணால் முடியும்: குமரியின் முதல் பெண் அய்.பி.எஸ் பிரபினா
  • பெரியார் பேசுகிறார்: கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம்!
  • மருத்துவம் :விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (21)
  • முகப்புக் கட்டுரை : பண்பாட்டுப் படையெடுப்பை பகுத்தறிவால் முறியடிப்போம்!
  • மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
  • வாசகர் மடல்
  • 2011 இதழ்கள்
  • 2012 இதழ்கள்
  • 2013 இதழ்கள்
  • 2014 இதழ்கள்
  • 2015 இதழ்கள்
  • 2016 இதழ்கள்
  • 2017 இதழ்கள்
  • 2018 இதழ்கள்
  • 2019 இதழ்கள்

Back to Top

© Copyright 2018 - All rights reserved. Designed and Hosted by Periyar Webvision.