முகப்பு

ஆகஸ்ட்16-31_2010


தலையங்கம்

27% இட ஒதுக்கீட்டிற்கு மேலும் காலதாமத சூழ்ச்சி

மத்திய கல்வி நிறுவனங்களிலும், மாநில அரசு கல்வி நிறுவனங்களைப் போல, பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப் பட்டோருக்கும் இட ஒதுக்கீடு என்பதை வற்புறுத்தி, தந்தை பெரியார் அவர்கள் 1950 இல் போராடியதன் விளைவாகவே, முதலாவது அரசியல் சட்டத் திருத்தம் 1951 இல், பிரதமர் பண்டித நேரு, சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் ஆகியவர்களால் நிறைவேற்றப்பட்டது. 15(4) பிரிவு இணைக்கப்பட்டது.

மத்திய அரசில் உள்ள மேல்ஜாதி பார்ப்பனக் கூட்டு ஏகபோக ஆதிக்கம், அதனை அங்கே செயல்படுத்த விடாமலேயே இருந்தது; நாமும் சமூகநீதிப் போராளிகளும் தொடர்ந்து வலியுறுத்திப் போராடி மண்டல் ஆணையத்தின் பரிந்துரையும் இணைந்த


தொடரும் வறுமையும் ஏழுமலையானின்
2 லட்சம் கோடி ரூபாயும

இந்திய நாடாளுமன்றம் முடங்கியது; எதிர்க்கட்சிகள் போர்க்கோலம்; என்ற செய்திகள் அண்மைக்காலமாக ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போதும் வந்துகொண்டிருக்கிறது. எதற்காக நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்? அரசின் ஊழலைக் கண்டித்து அல்லது அரசு தோல்வி அடைந்துவிட்டது எனவே பதவி விலகவேண்டும் என்பதை வலியுறுத்தி அல்லது இந்த அமைச்சர் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளார், அதனால் அரசுப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது எனவே அவரை பதவிநீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் இப்படி ஏதாவது ஒரு காரணம் முன் வைக்கப்படும்.

இவையெல்லாம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது விலைவாசிப் பிரச்சினை. இந்திய விடுதலைக்குப் பின் நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பாடப்படும் பாட்டு இது.


பூனைக்குட்டி வெளியில் வந்தது!

கலி.பூங்குன்றன்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜூலை 23 அன்று ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது.

பெரியார்தம் சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்கவில்லை; அப்படி எழுதி வைக்கப்படாத நிலையில், அந்தச் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக் கொள்ளலாம் என்பதுதான் சட்டத்தின் நிலை!

அப்படி அரசு எடுத்துக் கொள்ளவில்லையென்றால், உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடருவோம் என்று கழகத்தால் விலக்கப்பட்ட ஒருவர் பேட்டியளித்ததாக அந்தத் தனியார்த் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.


அய்யாவின் அடிச்சுவட்டில்...
ஆற்காடு மாநாடு

கி.வீரமணி

7,8-4-1973 இல் வட ஆற்காடு மாவட்டத்தின் இருபெரும் மாநாடுகள் ஆற்காடு நகரில் தொடங்கி இருந்த நிலையில் முதல் நாள் நள்ளிரவு மாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கிறது. பந்தல் அடியோடு தீக்கிரையாகிவிட்டது. என்றாலும், உடனடியாக மீண்டும் பந்தல் அமைப்பு வேலை நடைபெற்றது. மாநாடுகள் திட்டமிட்டபடி நடக்கின்றன. இன்று மதியம் ஊர்வலம். ஆற்காடு நகர வரலாறு இதுவரை கண்டிராத அளவு பீடுடனும் பெருமையுடனும் நடைபெற்றது.

வடஆற்காடு மாவட்ட திராவிடர் கழக மாநாடும் பகுத்தறிவாளர் கழக மாநாடும் இன்றும் நாளையும் நடத்தப்பட வேண்டும் என்று ஆற்காடு நகரில் பெரியார் திடலில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 

உண்மை புத்தக வடிவில் படிப்பதற்கு...


Archive's



2010